பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 6 I (1) சில சமயங்களில் சுக்கில உயிரானது சினைக்குழாய் வழியாக சினைப் பைக்கே சென்று அங்குள்ள முட்டையுடன் கலந்து கர்ப்பம் உண்டாக்கலாம். (2) அல்லது சினைக் குழாயில் வைத்தே முட்டையுடன் கலந்தாலும் கலந்தபின் கர்ப்பப் பைக்கு வராமல் அங்கேயே தங்கியும் விடலாம். (3) சில சமயங்களில் சினைக் குழாயில் இரண்டு முட்டைகள் வந்து இரண்டு சுக்கில உயிர்களுடன் கலந்து இரட்டைக் குழந்தைகள் உண்டாகும்படி செய்யலாம். (4) சில சமயங்களில் ஒரே முட்டைக்குள் இரண்டு சுக்கில உயிர்கள் சென்று இரண்டு தலையுள்ள குழந்தை யைச் சிருஷ்டித்து விடலாம். ஆனல் இவையெல்லாம் அபூர்வமாகவே நடப்பவை.

மாத விடாய் முட்டை சினைக்குழாயில் இருக்கும். சுக்கில உயிர்கள் அதைச் சூழ்ந்து நின்று அதனுடன் கலக்க முயலும். ஆயினும் அவை வெற்றி பெருமல் போகுமானல் அந்த முட்டையும் உயிர்களும் கர்ப்பப்பைக்கு வந்து அங்கு கருத் தங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த மெல்லிய சவ் வோடும் இரத்தத்தோடும் பெண்குறி வழியாக வெளியே வந்துவிடும். இதையே மாதவிடாய் என்றும் சூதகம் என்றும் கூறுகிருர்கள். - அதன்பின் அடுத்த சினைப்பை ஒரு முட்டையை வெளி யாக்கும். அதை வரவேற்பதற்காகவும் முன்போல் கர்ப் பப்பை தயார் செய்யப்படும். இப்படிக் கரு தங்கும் வரை மாதந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். கருத் தங்கிவிட்டால் மாதவிடாயாகப் போகும் உதிரம் எல்லாம் குழந்தையைப் போஷிப்பதற்கு உபயோகமாகின்றது. அத லேயே கருவுண்டானதும் மாத விடாய் நின்று பாகின்றது. ஆகவே கர்ப்பம் உண்டாவதற்கு அவசியமானவை