பக்கம்:வீடும் வெளியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 13 இருந்தால் எதையும் சாதித்து விடலாம்; இஷ்டம்போல் இாழலாம். ஆகவே, பணம் பண்ணுவோம். எப்படியும், எவ்வகையிலும், பணம் சேர்ப்போம். எவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வளவு மிகுதியாகப் பணம் சம்பாதிக்க முடியுமோ, அத்தனை வேகமாக அதிகம் அதிகமாகப் ப்னம் சேர்த்தாக வேண்டும். என்ருெரு வெறிவேகம் மனிதரிடையே பரவியிருப்பதைக் காந்தி உணர முடிந் தி.இ. முடிவுதான் முக்கியம்; அதை அடைவதற்கான வழி வகைகள் எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற நோக்கு ஊறிப்போனதால், எல்லாத் துறைகளிலும் எத்துவேலை அதிகரித்து விட்டது. நாணயம், நேர்மை, நியாயம் முதலியன மூலையில் ஒதுக்கித் தள்ளப்பட் கடுள்ளன. டஇந்த ரீதியில் எண்ணி அவன் வேதனைப்படுவ தற்கு அன்று நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் காரணம். சுந்தரம், பிரமுகர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந் தார். காந்தியும் அவருடன் போகவேண்டியவன்தானே? போனன். திருவாளர் புன்னேவனம் ஒரு குட்டித்தலைவர் கட்சி ஆயின் பெயரைச் சொல்லியும், தனது வாக்கு பலத்தை உபயோகித்தும் அவர் எவ்வளவோ காரியங்களைச் சாதித்து வருகிருர், அவருடைய தயவை நாடிப் பலரும் வருவது வழக்கம். அவர் உதவி செய்ய இசைவார். அதற்கு அவர்கள் பணம் கொடுத்தாக வேண்டும். வெற்றிகரமாக எல்லாம் முடிந்த பிறகு அவர்கள் கொடுக்க வேண்டிய காணிக்கை வேறு. - புன்னைவனம் நல்ல பிரசங்கி' என்று பெயர் வாங்கிவிட்டார். மக்களுக்குப் பிடித்த முறையில், அவர் களுடைய உற்சாகத்தைத் தூண்டும் முறையில் குட்டிக் கதைகளும் நாட்டுப் பாடல்களும் கற்பனைச் சரக்குகளும் கலந்து சுவையான சொல் விருந்து அளிக்கும் திறமை சாலி அவர், அதனுல் அவருடைய சொற்பொழிவு களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. புகழ்பெற்று,