பக்கம்:வீர காவியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 காட்சிப் படலம்


மனத்திலவள் நினைத்தவனம் வீரன் நின்னை மணம்புரியும் பேறடைந்தாள்; வாழி எங்கள் அனத்தைவெலும் நடையழகி என்ருள் தோழி; 'அவளினுமோர் பெரும்பேறு நானே பெற்றேன் எனப்புகலின் அதுபொருந்தும்! நினைத்த தைத் தான் இளவரசி அடைகின்ருள்; நினையா ஒன்றை எனக்களித்த வாய்ப்பன்ருே பெரிது! வாழ்வில் இனைய தவம் உடையரிலர்' என்ருன் வீரன். 81 பேறுடையார் இருவருந்தாம்! காதற் போரில் பிழையின்றி இருவருமே வாகை கொண்டீர்! மாறுடைய கருத்தில்லை; நாளே மாலை மலர்ப்பொழிலுள் உறுபொய்கைக் கரையின் பாங்கர் ஏறனையாய்! எங்கள் குலத் தலைவி நிற்பள்; ஏகுவையேல் அவண்காணல் கூடும்' என்று கூறியவள் விடைகொண்டு மீண்டாள்; வேழன் கொடுமிரவு விடைபெறலை நோக்கி நின்ருன். 82 பாங்கர்-பக்கம். 위 வண்- அங்கே =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/52&oldid=911539" இலிருந்து மீள்விக்கப்பட்டது