இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49 காட்சிப் படலம்
மனத்திலவள் நினைத்தவனம் வீரன் நின்னை
மணம்புரியும் பேறடைந்தாள்; வாழி எங்கள் அனத்தைவெலும் நடையழகி என்ருள் தோழி;
'அவளினுமோர் பெரும்பேறு நானே பெற்றேன் எனப்புகலின் அதுபொருந்தும்! நினைத்த தைத் தான்
இளவரசி அடைகின்ருள்; நினையா ஒன்றை எனக்களித்த வாய்ப்பன்ருே பெரிது! வாழ்வில்
இனைய தவம் உடையரிலர்' என்ருன் வீரன். 81
பேறுடையார் இருவருந்தாம்! காதற் போரில்
பிழையின்றி இருவருமே வாகை கொண்டீர்! மாறுடைய கருத்தில்லை; நாளே மாலை
மலர்ப்பொழிலுள் உறுபொய்கைக் கரையின் பாங்கர் ஏறனையாய்! எங்கள் குலத் தலைவி நிற்பள்;
ஏகுவையேல் அவண்காணல் கூடும்' என்று கூறியவள் விடைகொண்டு மீண்டாள்; வேழன்
கொடுமிரவு விடைபெறலை நோக்கி நின்ருன். 82
பாங்கர்-பக்கம். 위 வண்- அங்கே =