பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

ஜேம்ஸ் ஆலன்



ஏனெனின், சால்புடைய மனிதன் செயல்களின் நிலைபேறுகொண்ட விதிகளின் வழியே நடப்பவனாயிருக்கின்றான். அவ் விதிகளாவன மனித சமூகம் நிலைபேறு கொண்டுள்ள அடிநிலை முறைகள் மட்டுமன்று, இப் பரந்த உலகத்தையே ஒன்றாக இணைத்திருக்கும் விதிகள். இவற்றை யாரே வெறுமையாக்கிவிட முடியும்? அவன் என்றும் ஊற்றுகளால் ஊட்டுவிக்கப்படுகின்ற வேர்களைக் கொண்ட வலிமையான மரத்தைப் போன்றனவாகும்; எந்தச் சூறாவளியும் அதைச் சாய்த்து வீழ்த்திவிட முடியாது.

சால்பு முழுமைநிலை எய்தியதாகவும், வலிமை உடையதாகவும் இருக்க வேண்டுமெனின், அது முழுமனிதனையும் தழுவி நிற்க வேண்டும். அது அவனுடைய வாழ்வின் நுணுக்கங்கள் அனைத்திலும் பரவி நிற்கவேண்டும்; நெறிப் பிறழச்சிக்கு விட்டுக் கொடுக்கத் தூண்டும் ஆர்வ அவா எழுச்சிகள் அனைத்தையும் எதிர்த்துத் தடை செய்யுமளவிற்கு அது அத்துணை ஆழப் பதிந்ததாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் தோல்வியுறுவது என்பது அனைத்திலும் தோல்வியுற்று விடுவதேயாம். எத்துணை தேவையானதாகவும், மிகச் சிறிய காரியமாகவும் தோற்றமளிப்பினும் நெருக்கடியானபோது பொய்ம்மைக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்வது, சால்பு எனும் கேடயத்தை வீசி எறிந்து விட்டுத் தீமையின் தாக்குதல்களுக்குத் தன்னைத் திறந்து காட்டுவதேயாகும்.

சால்பிலே ஆழ்ந்து வேரூன்றாத மனிதன் தனது நல்வாய்ப்புகளுக்காகவும், ஆக்கத்திற்காகவும் ஒரு