உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று தமிழ் நாட் டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய தற்கு ஏற்ப ஆற்றல் மறவர்கள் நிறைந்த நாடு நம் தமிழ் மாநி லம். ஆகவே, அந்தத் தமிழ்ப் பெருமக்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றியினைத் தேடித் தரத் தங்கள் இன்னுயி ரைத் தந்திருக்கிறார்கள்; தங்கள் அங்கங்களை அறுத்துக் கொடுத்தி 33 ருக்கிறார்கள்; கால் கைகளை இழந்து பச்சை ரத்தத்தைப் பரிமாறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீர மறவர்களுக்கு இப்பேரவையின் வணக்கத்தைச் சொல்வதன் மூலம் நாம் நம்முடைய மதிப்பை உயர்த்திக் கொள்கிறோம் என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட வீரர்களுக்கு இப்போதுகூட இந்த அரசு சில விருதுகளையும்,அந்த விருதுகளுக்கு ஏற்பப் பண முடிப்புக் களையும் தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அது போதாது என்றாலும், நம்மால் முடிந்ததைச் செய்கிறோம்; நம்முடைய இதயத்தை அந்தக் குடும்பத்தின் பக்கம் ஒப்படைக்கிறோம். ஆறுதல் வழங்கும் பொறுப்பு அனைவர்க்கும் உரியது நண்பர் டாக்டர் ஹண்டே அவர்கள் சொன்னார்கள், கன்னர் ஆறுமுகம் அவர்கள் பற்றிய கடிதத்தை இந்த அவையில் குறிப்பிடுவது நல்லது என்று. அது உங்களுடைய உள்ளத்தைத் தொடக் கூடியது. இப்படிப்பட்ட இல்லங்களிலே ஆறு என ஓடுகின்ற கண்ணீரைத் துடைப்பதற்குப் பயன்படும் என்று இதை அவையில் படிக்கிறேன். அது நீண்ட கடிதம், ஒரு பகுதியை மாத்திரம் படிக்கின்றேன். மேஜர் பால் அவர்கள், ஆபீசர் கமான்டிங், எழுதியுள்ள கடிதம்: Unfortunately gunner Arumugam got a bullet hit in his head while fighting this action but he carried on his duties until he fell dead, in the service of our motherland. His bravery and courage has become an example and source of

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/35&oldid=1706869" இலிருந்து மீள்விக்கப்பட்டது