த. கோவேந்தன் 33
வாழ்வில் ஏற்படும் போராட்டங்கள் என்னும் புயல் களை அமைதிப்படுத்துகிறது;
ஆசைகளினால் இழுத்துச் செல்லப்பட்டவர்களுக்கு அமைதியைக் கொடுக்கிறது;
மனத்துன்பம் எனும் இருள் நீரிலே, அமைதி எனும் எண்ணெயை உள்:ற்றுகிறது;
தொல்லைகளுக்குட்பட்ட மனம் மீண்டும் முன்னைய நிலைக்குத் திரும்பி அமைதியில் மூழ்கி விடுகிறது.
மீட்கப்பட்டவர்கள் நிறைவு அடைகிறார்கள்;
அவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உள்ளனர்;
தீய கவர்ச்சிப் புயல்களினால் அவர்கள் அடித்துச் செல்லவோ தோற்கடிக்கவோ படமாட்டார்கள்;
கொடிய பேராசைகளினால் தாக்குண்டு கீழே மிதிபட மாட்டார்கள்;
இவற்றிற்குக் காரணம்- அவர்கள் பாதுகாப்பான இடத்தில் வாழ்கிறார்கள்.
மீட்கப்பட்டவர்களை எந்த எதிரி வெற்றி கொளன முடியும்?
முதன்மையான எதிரி, தன்னலத்தைக் கூட அவர்கள் வெட்டி வீழ்த்தவில்லையா?
ஆண்டவனின் கோட்டையான அவர்களின் நெஞ்சத் தைக் கூட அவர்கள தங்களுக்கே உரியதாக்கிக் கொள்ள
வில்லையா!
- ஆம்! அவர்கள் தங்கள் உள்ளத்தைத் தூய்மையாக்கி விங்ே:ர்கள், அதனால் தூய்மையற்றவர்கள் தூயவர்களை வெற்றி பெற முடியாது.
அந்தக் கரிய இரவிலிருந்து