பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. இருந்த பறவையும் பறந்தது!

'

ஏய் வேணு என்ற சத்தம் கேட்டு, ஓங்கிய ஜேவலினை அப்படியே நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான் வேணு அங்கு குணசேகர் நின்று கொண்டிருந்தார்.

எதிர்பார்க்கவில்லை வேணு. பயிற்சியாளர் மார்லணடோவுக்கு அப்பொழுதுதான் போன உயிர் திரும்பிவந்தது. போல தெளிவு, பெற்றார்.7வேலே கீழே போடு.

குணசேகர் வாயிலிருந்து வார்த்தை வரவில் 8ல. கடுமை யான கட்டளே பிறந்தது.

தலை குனிந்தவாறு வே ணு நின்று கொண்டிருந்தான். அவனருகில் குணசேகர். மதுவாடை மூக்கோடு கலந்து அவரது முகத்தில் படர்ந்தது. முகத்தை சுளித்து' கொண்டார்.

இப்படித்தான் நீ புகழ் வாங்கனும்னு விளையாட்டுத் துறைக்கு கொண்டு வந்தேன். நீயோ எப்படியும் usلا வாங்கிடலாம்னு கொலை வெறியில் நிக்கிறே ! பரவாயில்லேமத்ததெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம். நீ போ.