பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


வேலைகளை வாங்கி தந்துதவவேண்டும் என்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார் இன்பநாதன்.

நடக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடத்த முடியும் என்ற வழிமுறைகளும் உள்ளன என்கிறீர்கள் ! நடை முறை சாத்தியமில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? குணசேகர் குறுகுறுப்புடன் கேட்டார்.

'நான்கு மாடுகள் ஒரு சிங்கம்' எனும் கதை உங்களுக்குத் தெரியும். அந்தக் கதைதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. மாடுகள் மாடுகளையே முட்டிக் கொண்டிருக்கின்றன. சிங்கமோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 'ஒரு குச்சியை ஒடிக்கலாம். ஒரு கட்டுக் குச்சியை ஒடிக்க முடியாது’ என்ற உண்மைக் கதை உயிரில்லாமல் உள்ளத்தில் முடங்கிக் கிடக்கிறது. ஆசை ஆவேசம் இரண்டும்தான் இப்பொழுது எங்கள் துறையில் ஆரோகணம் பாடிக் கொண்டு இருக்கிறது.

ஒற்றுமை மட்டும் வந்துவிட்டால், உடற்கல்வித் துறை உயர்ந்த துறையாகிவிடும். நாட்டு மக்கள் திடமான மக்களாகி விடுவார்கள். நல்ல சூழ்நிலையும் நலமான வாழ்வும் அமையும் என்ற நம்பிக்கையுடன் வாழலாம்.

ஆனால், அந்த அருமையான ஒற்றுமை நிலை அமையாதா என்றுதான். இந்தத் துறையில் ஆர்வம் உள்ள ஒரு சிலர். உண்மையாகவே, எதிர்ப்புகளுக்கிடையே விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகின்றார்கள்.

உடற்கல்வித்துறை மிகவும் உயர்ந்த துறை என்கிறீர்கள். அதை உலகத்தார்க்கு உணர்த்திட முடியாதா என்றார் குணசேகர்.