பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் | 85 கங்களுள் குறிக்கப் பெற்றுள்ளது. ஆயினும் பின்பற்றுபவர் ιιμrrΓί ? . இதுவே யன்றிப் பலபெரும் போர்களும், நாடழிப்புகளும் தனிமனிதர் கொலைகளும் பிற கொடுமைகளும் புலவர்தம் வாக்குகளால் தடுக்கப் பெற்றுள்ளமையை எத்தனையோ புறப்பாடல்கள் அறிவுறுத்தும் செய்திகள் நாடறிந்தவையே. ஏணிச்சேரி முடமோசியார், ஒளவையார், கோவூர் கிழார் முதலிய பெரும்புலவர்களால் தடுக்கப்பெற்ற போர்களும் கொடுஞ்செயல்களும் எத்தனையோ அன்றே! இவ்வாறு போராற்றும் பெருமன்னரை வேறுவகை அறத்திலும் அமைதிகாணும் வகையில் புலவர் போற்றுவர். அதுவே இல்லற வாழ்வு. தமிழ் வேந்தர் போர், போர் என்றே புகுவர் போலும் என எண்ணுவாருக்கு, அவ்வெண்னம் தவறுடைத்து என் பதைப் பல புலவர்கள் எடுத்துக் காட்டி உள்ளனர் என்ப தில் சில மேலே கண்டோம். ஈண்டும் சில கண்டு அமை வோம். முதலாவதாக நாம்முன் கண்ட ஒளவையார் பாட்லேயே காண்போம்.இருபெரு வேந்தரை ஒரு சேரக்கண்ட மகிழ்ச்சி .யில் ஒளவையார் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என வற்புறுத்துகின்ருர். இருவரும் பிரியாது வாழவேண்டும் என வாழ்த்திய அவர், முதலில் அவ்விருவரும் தம் உரிமை மகளி ாோடு இணைபிரியாது வாழ வேண்டும் எனக் காட்டுவர். பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் (புறம். 367) & என்கின்ருர். பிற்காலத்தில் தோன்றிய சில பாடல்கள் தமிழ் நாட்டில் துறவை வற்புறுத்துவதைக் காண்கின்ருேம். குழவி இடத்தேதுறந்த நிலையினையும் பல்லென்பு கண்டுபதைப்பதை