பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

வள்ளியம்மாள் கல்வி அறம்



இந்நிலை இன்று மாறிவிட்டதே என்பதற்காகத் தான் இன்று பல குரல்கள் எழும்பியிருக்கின்றன. பெண்கள் உயர்வதற்குப் பெண்கள் மட்டுமன்று, ஆண்களும் குரல் கொடுக்கவேண்டும். ஆண்கள், பெண்களின் வாழ்க்கை உயர்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அதைச் சிறப்புறச் செய்தல் வேண்டும். இதைத்தான் அ.மு.ப. செய்து வருகிறார்கள். அன்னை மேலிருக்கின்ற அன்பினால் அவர் பெயராலேயே ஒரு கல்லூரியை நிறுவி, ஆயிரக்கணக்கான மாணவிகளுக்குக் கல்வி கொடுத்து வருகிறார்கள். திரு. அ.மு.ப. அவர்களும், இந்நிறுவனமும் பல்லாண்டு சிறப்புற வாழவேண்டும் என வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி! வணக்கம்.