பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேங்கடம் முதல் குமரி வரை
- பாலாற்றின் மருங்கிலே -
1. வடவேங்கடவன்

ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஒரு ஊமை, இப்படி நான்கு பேர்கள் ஒரு மலை ஏறுகிறார்கள். மலை என்றால் ஏதோ இமயத்தின் சிகரத்தைப் போன்று நீண்டு

ஆனந்த நிலைய விமானம்

உயர்ந்த மலை அல்ல. சின்னஞ் சிறிய மலைதான். அந்த மலைமீது ஒரு கோயில். அந்தக் கோயிலிலே ஒரு தெய்வம். அந்த தெய்வத்திடம் அசையாத நம்பிக்கை மக்களுக்கு, கேட்கும் வரத்தையெல்லாம் அளிக்க வல்லது என்று.

ஆதலால் வாழ்க்கையில் இந்த ஊனுடம்பில் ஏற்பட்ட குறை காரணமாகத் துயருறுகிறவர்கள் நால்வர் மலை ஏறுகிறார்கள். இவர்களைப் போல், உடம்பில் குறை இல்லா விட்டாலும், உள்ளத்தில் குறையுடையவர்கள் பலரும் மலை ஏறுகிறார்கள்.