பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வேங்கடம் முதல் குமரி வரை

மற்ற கோயில்களில் இருக்கும் சிவகாமி போல கைகளை ஒயிலாய் போட்டுக் கொண்டிருக்காமல் தன் காதலன் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்றவாறு தாளமிடும் பாவனையில் அவள் கைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறாள்.

'அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த நடம்புரியும் சித்திரப் பொற் பொது உடையான் கோலம் போற்றி, என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடியதற்கு ஏற்ப அமைந்த சிலை வடிவோ என்னும்படி மிக்க அழகாக இருந்தது. இதை எல்லாம் அமெரிக்க நண்பர் அனுபவிக்க முடியாவிட்டாலும், சிலை வடிவில் உள்ளதை அனுபவித்தார்கள் இருவரும். அங்கிருந்து அவர்களை இழுத்துச் செல்வது பெரும் பாடாகிவிட்டது.