பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வேலை நிறுத்தம் ஏன்? கட்டில், பீரோக்கள் - வெள்ளிப் பாத்திரங்கள் - மேஜை நாற்காலிகள் இவற்றைப் பற்றி எந்தத் தொழிலாளியும் மனதால்கூட நினைப்பதில்லை. இந்த நாட்டுத் தொழிலாளிகளின் கவலை யெல்லாம், இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடுவதற்கு வழி என்ன?" என்பதே! இன்னும் சொல்லப் போனால் ஆடையைப் பற்றிக்கூட அவர்களில் பெரும்பாலோருக்கு அவ்வளவாக அக்கறை கிடையாது! இந்த அழகான வாழ்க்கைக்கு வேண்டிய வருவாயாவது வேண்டுமென்றுதான் அவர்கள் இன்று கேட்கிறார்கள். "அதுகூடக் கொடுக்க மாட்டோம்!" என்றுதான் இந்த நாட்டு ஈவிரக்கமற்ற முதலாளிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்!