பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வேலை நிறுத்தம் ஏன்? மத்தியஸ்தர் மர்மம் "அந்நிய நாட்டுப் பொருட்களைப் பகிஷ்காரம் செய்ய வேண்டும்' என்று பிரசாரம் செய்த காங்கிரஸ் காரர்கள், பதவி ஏற்ற பின் அன்னிய நாட்டுச் சர்க்காரின் வேலைத் திட்டங்களையே பின்பற்றுவது வெட்கக் கேடான விஷயம். யதேச்சாதிகாரசர்க்காரின் வேலைத் திட்டங்களுக்கும் ஜனநாயக சர்க்காரின் வேலைத் திட்டங்களுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லையானால், அந்த சர்க்கார் இருப்பதும் ஒன்றுதான்; இல்லாமற் போவதும் ஒன்றுதான் பொதுஜனத் திருப்திக்காக, 'ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது" என்பது போன்ற ஏதாவது ஒரு திடுக்கிடும் சட்டத்தைச் செய்துவிட்டு, "பார்த்தீர்களா? நாங்கள் எப்பொழுதுமே உங்களுடைய நலனுக்காகத்தான் உழைக்கிறோம்!"