பக்கம்:வையைத் தமிழ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை மதுரை வாழ்வு என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. தாயின் கருவில் தங்குவது போன்று நான் அங்கே தங்கிய காலம் பத்துத் திங்களேயாம். எனி னும் அக்குறுகிய காலத்தில் கான் பல நல்ல அனுபவங் க்களப் பெற்றேன். வையைக் கரையில்-வளமார் மதுரையில்வாழ்ந்த காலத்தே நான் ஆற்றிய சொற்பொழிவுகள் புல; எழுதிய கட்டுரைகள் பல. அவற்றுள் ஒரு சிலவே இந்நூலில் இடம் பெறுகின்றன. பின்னும் வேண்டு வனவற்றை வாய்ப்புளதேல் தொகுத்து வெளியிட எண்ணியுள்ளேன். வையைக் கரையில் உள்ளத் தெழுந்த எண்ணங் களே இப்பேச்சுக்களையும் சொற்பொழிவுகளையும் உரு வாக்கின்மையின் இந்நூலுக்கு "வையைத் தமிழ்' என்றே பெயர் இட்டேன். வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி'யின் மடியில் தவழ்ந்தும் இயைந்தும் நான் தமிழ் மாணவனக இருந்து பெற்ற உணர்வு:அலைகளே இந்நூலுக்கு ஊற்ருகும். வையைக் கரையில் நான் ஆசிரியனுக இருந்தேன் என்பதைக் காட்டினும் மாணவகை இருந்து அறிவு வளரப் பெற் மேன் என்பதே பொருந்தும். இந்நூல் வெளிவரக் காரணராயிருந்த அனைவருக் கும் என் நன்றி உரித்தாகும். . சென்னை-30, . 35–6—59. -Զ1 (ք- ւ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/5&oldid=921838" இலிருந்து மீள்விக்கப்பட்டது