இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1872 | செப்டம்பர் 5—நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறப்பு. | |
1894 | பிப்ரவரி—வழக்கறிஞர் பயிற்சியில் தேர்ச்சி. | |
1895 | வ.உ.சி. — வள்ளியம்மை திருமணம். | |
1900 | தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணி தொடங்குதல் | |
1901 | வ.உ.சி. — மீனாட்சியம்மை திருமணம். | |
1905 | மே— பொ. பாண்டித்துரைச் சாமித் தேவர் அவர்களைத் தலைவராகக் கொண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பரிசோதக உறுப்பினராகப் பொறுப்பு. | |
1906 | அக்டோபர் 16-சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882ஆம் ஆண்டுக் கம்பெனிகள் சட்டப்படி எண் 85 கிரேட் காட்டன் சாலை, துரத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் 13 of 1906. | |
டிசம்பர்—சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கு இரண்டு கப்பல்கள் வாங்க வ.உ.சி. பம்பாய் சென்றார். அவர் அங்கு இருக்கும்போது மூத்த மகனும் மனைவியும் உடல்நலம் குன்றியதையும் பொருட்படுத்தாமல் பம்பாயில் தங்கி, திலகரின் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார். | ||
1907 | பாரதியாருடன் சூரத் காங்கிரசில் பங்கு பெற்றார். | |
1908 | நெல்லை தேசாபிமான சங்கம் உருவாகிறது. ஆறுமுகத்தம்பிரானைக் கொலை வழக்கில் விடுவித்துச் செல்வாக்குப் பெற்றார். | |
பிப்ரவரி 3 முதல் மார்ச்சு 9 வரை துர்த்துக்குடிக் கடற்கரையில் சுப்பிரமணிய சிவாவுடன் தொடர் சொற்பொழிவுகள். |