பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஹிராடெடஸின்


★ தமிழக மன்னர்களும், பண்டைய குரு குல மாணவர்களும், விற்போர், வாட்போர், மற்போர் ஆகியவற்றைக் கற்றிருந்தார்கள். அரிச்சந்திரன் வரலாறு உண்மையைப் போற்றியது.

★ கடன்கள் கொடுப்பார்கள் தமிழர்கள். திருப்பித் தர முடியாவிட்டால் தக்கத் தண்டனையைக் கொடுப்பார்கள் என்பதே அவர்களின் கொள்கை.

★ தம் சடலங்கள் கூட விலங்குகளுக்கு உணவாக வேண்டும். வீணாகக் கூடாது என்பது தமிழ் நாட்டு சைனர்களின் எண்ணம்.

★ தமிழர்கள் தலைமயிரை நீளமாக வளர்த்தார்கள். தலைப்பாகையை அணிந்து கொள்வார்கள்.

★ திருமணமான பெண்களைத் தமிழர் பரிசம் கொடுத்து விலைக்குப் பெற்றார்கள்.

★ பண்டைத் தமிழர்கள், பொதுநல மருத்துவ விடுதிகளில் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்வார்கள். தமிழர்களின் பண்டைய பழக்கமாகும். இன்றும் அவ்வாறே செய்து வருகிறார்கள்.

★ தமிழர்கள் தங்களின் பெண்களின் கற்பைப் பாதுகாத்து வந்தார்கள். இடைக் காலத்தில் தெய்வங்களுக்கு என்று சில பெண்கள் விடப்பட்டார்கள்.

★ தமிழ்நாட்டில் தமிழர் புதன்கிழமை, சனிக் கிழமைகளில் எண்ணெய் வைத்து தலை முழுகுவார்கள். எள்ளில் இருந்து பிழிந்த எண்ணெயினையே பயன்படுத்துவார்கள். வேட்டியையும், மேலங்கியையும் உடைகளாக அணிவது அவர்களது பழக்கமாகும்.

★ திருமணமான பெண்கள் தங்களது பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியதில்லை. கட்டாயப்படுத்தும் பழக்கம் இல்லை.