பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XV


வாய்க்கப் பெற்ற மாத்தகை நண்பன்
சிதம்பர வேள் தன் சீர்பெறும் வாழ்வே
வாழ்வென மகிழா பலருமவ் வம்மையைப்
போற்றப் புகழுடம் பெடுத்துப் பூத
உடலம் துறந்ததை ஒண்பாவின் ஓதினன்
அளகை நகரின் அருகிற் பொருந்தும்
முடிமன் செய்த முதுதவப் பயனால் ௫௰

அங்குதித் தெங்கும் அளவிற் புகழ் நிறீஇ
அடிமுடி யின்றி யகண்டம தாகி
எங்கும் தானா யிலங்கும் ஏக
சச்சிதா நந்தத் தனிப்பரம் சுடரைத்
தானாய் வணங்கி யூனமார் மண்பெண்
பொன்மேல் ஆசை மன்னா தகற்ற
முயலும் என்தன் முத்தைய மால்தான்
உலகிற் பெண்கள் உயர்தர
நடைபயின் றழிவில் நலம்பெறு மாறே. ௫௯

சுவாமி–வள்ளிநாயகம்.