பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௪௬

தொல்காப்பியம் - இளம்பூரணம்


பொழிபெயல் வண்மையா னசோகந்தண் காவினுட்
கழிகவி னிளமாவின் றளிரன்னா யதன்றலைப்
[1]பணையமை பாய்மான்றே ரவன் செற்றார் நிறம்பாய்ந்த
கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்;
வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின்மேற்
றகையிண ரிளவேங்கை மலரன்ன சுணங்கினாய்
மதவலி கமழ்கடாஅத் தவன்யானை மருப்பினுங்
கதல்வாற் றக்கதோ காழ்கொண்ட விளமுலை;

என வாங்கு,



இனையன கூற விறைஞ்சுபு நிலநோக்கி
நினைகுபு நெடிதொன்று நினைப்பாள்போன் மற்றாங்கே
துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணன்
மனையாங்குப் பெயர்ந்தாளெ னறிவகப் படுத்தே.” (கலித்-௫௭)

“உறுகழி மருங்கி னோதமொடு மலர்ந்த
சிறுகரு நெய்தற் கண்போன் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை [2]யிருந்த வல்கு
லைய வரும்பிய சுணங்கின் வையெயிற்று
மையீ ரோதி வாணுதற் குறுமகள்,
விளையா டாயமொடு வெண்மண லுகுத்த
புன்னை நுண்டாது பொன்னி னொண்டு
மனைபுறந் தருதியாயி னெனையதூஉ
மிம்மனைக் கிழமை [3]யெம்மொடு புணரிற்
றீது முண்டோ மாத ராயெனக்
கடும்பரி நன்மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென வியக்க
யாந்தற் குறுகின மாக வேந்தெழி
லரிவே யுண்கண் பனிவர லொடுக்கிச்
சிறிய விறைஞ்சின டலையே
பெரிய வெவ்வம் [4]யாமிவ ணுறவே.” (அகம்-௨௩௦)

இவை உள்ளப்புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு[5] உரைத்தன. (எ)

௯௬, அச்சமும் நாணு மடனு முந்துறுத
னிச்சமும் பெண்பாற் குரிய வென்ப.


என்-னின், இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. அச்சமும் நாணும் பேதை[மை]யும் இம்மூன்றும் -நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றலாறு.


(பிரதி.) -

  1. 1. புணையமை யாய்மான்றே'.
  2. 2. 'யருந்த'.
  3. 3. 'யெவ்வமொடு'
  4. 4.'யாமினுறவே'
  5. 5. உரைத்தது'