இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்திய அரசமைப்பு
முகப்புரை
இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்,
அதன் குடிமக்கள் அனைவரும்
- சமுதாய, பொருளியல், அரசியல் நீதி,
- எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு,
- சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,
சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,
அவர்கள் அனைவரிடையேயும்
- தனிமனிதனின் மாண்பு, நாட்டுமக்களின் ஒற்றுமை,
- ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும்
- உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும்
உள்ளார்ந்த உறுதியுடையராய்,
நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்.