பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf/444

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

கண்ணப்பர் குருபூசை நாளன்று கண்பார்வை இழந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கிக்கொடுக்கலாம்.

இயற்பகை நாயனார் குரு பூசையின் போது வசதி இல்லாமையினாலே திருமணமாகாதிருக்கும் ஏழைகள் நாலுபேருக்குக் கோவிலிலே திருமணம் செய்து வைத்தாற் போதும்.

திருக்குறிப்புத் தொண்டர் திருநாளில் ஏழைக்கு உணவுப் பாத்திரம் கொடுக்கலாம்; ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டினை மாற்றவேண்டும்.

பிட்டுக்கு மண் சுமந்தான் என்பதை, மண்சுமந்தான் பிட்டுக்கு என்று மாற்ற வேண்டும். இக்காலத்தவர் பிட்டுக்கு மண்சுமந்த கதையைப் படித்துவிட்டுப் பிட்டை உண்கிறார்களே யொழிய மண்சுமத்தலை நினைப்பதில்லை. எனவே தொண்டை முன்னும் உண்டியைப் பின்னுமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.