பாஞ்சாலி சபதம்/72. அர்ஜீனன் சபதம்

விக்கிமூலம் இலிருந்து
72. அர்ஜுனன் சபதம்

பார்த்த னெழுந்துரை செய்வான்: -- ‘இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு -- எங்கள்
சீரிய நண்பன் கண்ணன்கழலாணை;
கார்த்தடங் கண்ணிஎந்தேவி -- அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -- ஹே!
பூதலமே! அந்தப் போதினில்’ என்றான். 102