பெரியசாமி தூரன்
இலட்சுமி துதி[தொகு]
ராகம் - தர்பாரி கானடா [1]
நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ?
நீரஜ தள நயனி, மஹா லக்ஷ்மி
நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ?
மானிடர் வாழ்வினிலே இன்ப துன்பம்
மாறி மாறி வருவது உன் செயல் அன்றோ?
நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ?
நீரஜ தள நயனி, மஹா லக்ஷ்மி
நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ?
எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன்னடி வணங்காமல் நிலை பெறுமா?
உன்னருள் பார்வை இல்லாதவர்கள்
உலகிலே வாழ வழியேது அம்மா?
நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ?
நீரஜ தள நயனி, மஹா லக்ஷ்மி
நீ நினைத்தால் ஆகாததும் உண்டோ?
- பெரியசாமி தூரன் [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ShrutiBox, பாடல் வரிகளும், இராகமும் (ஆங்கிலத்தில்)
- ↑ Periyasaamy Thooran, பெரியசாமி தூரன் (ஆங்கிலத்தில்)