மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
Jump to navigation
Jump to search
( அங்கதக் காவியம்)[தொகு]
விநாயகர் வணக்கம்[தொகு]
- எம்பெரு மானே! இணையடி பரவும்
- அன்பினர் வேண்டிடும் அவையெலாம் அளிக்க
- யானை நீள்கரம் ஏந்திய கடவுளே!
- உலகெலாம் போற்றும் ஒருவனே! உனது
- தந்தையோ,
"நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ஒரு சமுதாய அங்கதப் பாட்டாகும். நகைச்சுவையும் கிண்டலும் நிறைந்த அப்பாட்டுக்கு நிகரானதொரு ‘அங்கதப்பாட்டு’ இதுகாறும் தமிழில் தோன்றவில்லை.” -தமிழண்ணல் அங்கதம்-மேலை நாட்டார் விளக்கம்:
|
- என்றும் கையில் தலையோ டேந்தி
- இரந்து திரிவான் இருப்பிட மில்லான்,
- அம்பலந் தோறும் ஆடி அலைவான்,
- அமிழ்தென நஞ்சையும் அள்ளி உண்பான்,
- பித்த னாகிப் பேயொடு குனிப்பான்,
- நாடிய பொருளெலாம் நாசஞ் செய்வான்,
- மாமனோ,
- பூமக ளோடும் புவிமக ளோடும்
- மதித்திட அரிய வளமெலாம் ஒருங்கு
- வைகுந் திவ்விய வைகுந் தத்தில்
- ஆயிரம் பணாமுடி அரவணை மீதே
- அறிதுயி லமர்ந்திவ் வகில மெல்லாம்
- ஆளும் பெரிய அண்ணலே யாயினும்
- கபட நாடகன், கையிற் சக்கரம்
- இருந்தும் எவர்க்கும் ஈயாக் கள்வன்;
- ஆதலின், நீயும்
- தந்தை வீடென மதிப்பிட மின்றிச்
- சந்தியும் தெருவும் தண்ணீர்க் கரையும்
- மரத்தி னடியும் வாழிட மாக
- இருந்தனை உன்போல் இருவழி கட்கும்
- இடைவழித் தங்கி இடர்ப்படும் எங்கள்
- வருத்த மெல்லாம் அறிந்திட வல்லவர்
- அறிந்து முற்றும் அகற்றிடும் நல்லவர்
- நடுநிலை கண்ட நாயகர் வேறிங்கு
- ஒருவரும் இல்லையுன் திருவடி பணிந்து
- மருமக் கள்வழி மான்மியம் பாடத்
- தொடங்கினன், வந்து துணைநின் றிந்நூல்
- இனிது முடிய இதயம்
- கனிவு செய்தெனக் காத்தருள் வாயே......(35)
எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் முன்னுரையிலிருந்து
|
அவையடக்கம்[தொகு]
- அருந்தமிழ் அகத்தியன் ஆராய்ந் திடவும்
- கேள்வியிற் பெரியநக் கீரன் கேட்கவும்
- கல்வியிற் பெரியனாம் கம்பன் காணவும்
- இயற்றிய நூலிதென் றெண்ணவும் படுமோ?
- மருமக் கள்வழி யென்னும் வனத்தில்
- புலிகள் சூழுமோர் புல்வாய் போல
- வலையிற் படுமோர் மணிப்புறாப் போல
- கொள்கொம் பற்றுத் துவள்கொடி போல
- ஒருத்தி ஏழை ஒருதுறை யில்லாள்
- தானும் மக்களும் தமிய ராகிப்
- பொறியும் கலங்கிப் போதமும் கெட்டுப்
- புலம்பும் பொழுது புண்ணீய சீலரே!
- தொல்காப்பியமுதல் பல்காப் பியங்களும்
- கற்றுத் தெளிந்த கவிவல் லோரே!
- விகார முற்றும் விரவி வருதலால்
- பொருட்சுவை சொற்சுவை பொருந்திவந் திடுமோ?
- எதுகை மோனை இசைந்துவந் திடுமோ?
- அணிகள் பற்பல அடுக்கிவந் திடுமோ?
- ஆதலின், இதனைப்
- பதவியும் பணமும் படிப்பு மிலாதேன்
- பஞ்சப் பாட்டெனப் படித்திக ழாதீர்.
- இலக்கண வழூஉக்கள் இருப்பினும் அவற்றை
- வலித்தல் மெலித்தலாய் மதித்துக் கொண்மின்
- நீட்டல் குறுக்கலாய் நினைத்துக் கொண்மின்
- விரித்தல் தொகுத்தலாய் விளக்கிக் கொள்மின்
- பழைய திரிதலாய்ப் படித்துக் கொண்மின்
- இன்னும்,
- அமைக்கும் விதியறிந் தமைத்துக் கொண்மின்
- நாயேன்,
- கொண்ட கருத்தைக் குறைவறக்
- கண்டு கொள்வது பெரியவர் கடனே. (32)