மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/உலகம் இருக்கின்றது!

விக்கிமூலம் இலிருந்து

73. உலகம் இருக்கின்றது!

அமுதமே கிடைத்தாலும், அதனைத் தனியே இருந்து உண்ணார். சினங்கொள்ளார். யாரையும் ஏளனம் பண்ணார். சோம்பல் அற்றவர்.

பிறர்அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்; புகழ் கிடைப்பின் உயிரும் கொடுப்பர்! பழியெனின், உலகமே கிடைத்தாலும் விடுப்பர் அயர்வு அற்றவர்.

தாம் வாழ வாழாது, பிறர் வாழ வாழும் பெருந்தகையாளர் அவர்!

அவராலன்றோ, உலகம் நிலை பெற்று வாழ்கின்றது!