மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/உலகிற்கு உயிர் எது?

விக்கிமூலம் இலிருந்து

77. உலகிற்கு உயிர் எது?

“ஒளவையே” காலையில் உன்னைத் தேடினேன் காணவில்லை. எங்கே போயிருந்தாய்” என்றான் மன்னன் அதிகமான்.

“ஆற்றில் புது வெள்ளம் வந்திருக்கிறது”

“வயல்களுக்குத் தண்ணிர் திறந்து விட்டிருக்கிறார்களா?”

“ஆமாம் வயலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்”

“அப்படியானால் அச்சமில்லை. நெல்லும் நீருமே நம் நாட்டிற்கு உயிர்.”

“இல்லை அரசே இல்லை. நெல்லும் உயிரல்ல; நீரும் உயிரல்ல; மன்னனே நாட்டிற்கு உயிர் நீ தான். இந்நாட்டிற்கு உயிர். இதனை உணர்ந்து நடப்பதே உன் கடன்.”