மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/எது உடைமை

விக்கிமூலம் இலிருந்து

40. எது உடைமை?

மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்:

“திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு உடைமையானது எது?

பண்டு தொட்டு நின் நாட்டைக் கடல் கவர்ந்து கொள்ளவுமில்லை.... பகைவர் கைப்பற்றவுமில்லை... ஆனால், பாடி வரும் பரிசிலர் உன் நாட்டைக் கைப்பற்றினார்கள்...

உனக்கு உடைமை எது?

உன் மனைவியின் மெல்லிய தோள்...

உன் நாடு?-அது பொதுவுடமை!