மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/தமிழின் ஆட்சி!

விக்கிமூலம் இலிருந்து

28. தமிழின் ஆட்சி!

பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த யாழ்கொண்டாய். ஆனால் கொடுக்கும் இயல்பினர் இலாமையால் பசியைக் கொண்டனை சுற்றி அலைந்தும் வறுமை தீர்ப்பார் எவருமிலையே என்று சோர்வுற்று நிற்கிறாய்.

நின் நிலையை நான் அறிவேன்..நீ நேரே கிள்ளி வளவனைச் சென்று பார்! அவன் வாயிலில், காத்து நிற்கவேண்டி இராது. அப்படிக் காத்து நிற்பதும், ஒருகால் நிகழலாம். ஆனால், அரசன் உன்னைப் பார்த்து விட்டானோ, பொன்னாற் செய்த தாமரைப் பூவை, உனக்கு அளிக்க மட்டும் தவறான்... “போ... உறையூருக்குப் போ என்று ஆலத்தூர் கிழார் கத்தினார்...

கந்தல் உடை தரித்த நான் எங்கே? பொன்னாற் செய்த தாமரை எங்கே என்று கேட்டான் பாணன்.

“தமிழ் ஆண்டு கொண்டிருக்கும் போது, இசைமாண்டு கொண்டிருக்குமோ? என்று திருப்பிக் கேட்டார் கிழார்.