மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/தலைவனின் வலிமை

விக்கிமூலம் இலிருந்து

10. தலைவனின் வலிமை


பகைவர் அதியமானை எதிர்க்கத் துணிந்து விட்டனர். அவ்வையாருக்கு அவர்கள் மீது இரக்கம் பிறந்தது. ஆதலால் இந்த எச்சரிக்கை விடுத்தார்.

“பகைவர்களே! போருக்கு வராதொழிவிர்! வந்தால், ஒழிவீர் என்பது உறுதி!

எங்கள் படையில் உள்ள ஒரு மறவனுக்கு நீங்கள் ஈடாக மாட்டீர்.

அம்மறவனைப் பற்றி ஒரு வார்த்தை ஒரே நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் தச்சன், ஒரு மாதம் முயன்று ஒரு தேர்க்காலைச் செய்தான் என்றால், அத் தேர்க்கால் எப்படிப் பட்டதாயிருக்கும்?

இருநூற்று நாற்பது தேர்க்காலின் பலத்தைக் கொண்டதாயிருக்கும். அப்படிப்பட்ட தேர்க்கால் உங்கள் மீது பாய்ந்து வந்தால் நீங்கள் என்ன செய்வீர்?

அந்தத் தேர்க்கால், போன்றவன் எங்கள் படைத் தலைவன். போரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். போர்க்கு விருப்பமாயின், வருக!”