மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பகைவர்களின் நடுக்கம்

விக்கிமூலம் இலிருந்து

21. பகைவர்களின் நடுக்கம்

இடையன் ஆடுகளை ஒட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை வேகமாக விரட்டுகிறானே, ஏன்? புலியின் குகை அது. புலிக்கு அஞ்சி பயந்தோடுகிறான். பாவம் புலி கண்டால் அவன் ஆடுகளின் கதி என்ன?

குட்டுவன் கோதை பகைவர்க்குப் புலிபோன்றவன் அவன் அரண்மனையைக் கண்டாலே பகைவர் நடுங்குவர். அவர்கள் எல்லாம் செம்மறியாட்டுக் கூட்டம் தானே. அவன் இருக்கும் திசையை திரும்பிப் பாராமல் ஒடி ஒளிவர்.

அவனுக்கு அஞ்சாதவரும் உண்டு. அஞ்சாமல் அவன் அவைக்குள் புகுந்து நிமிர்ந்து சிங்க நடைபோடும் அச்செம்மல்கள் யார்? அவர்கள் தமிழ்ப் புலவர்களே ஆவர்!