மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/மலையைப் பாடினோம் மங்கை அழுதாள்!

விக்கிமூலம் இலிருந்து

51. மலையைப் பாடினோம், மங்கை அழுதாள்!

“வாருங்கள் புலவரே” என்று கை கூப்பி வரவேற்றான் பேகன்.

“பேகனே, இது கேள்” என்று தொடங்கினார் கபிலர்.

“வழியே நடந்து வந்தோம். வருத்தம் மிகுந்தது பசி வாட்டிற்று. சிற்றுார்க்குச் சென்றோம். ஒரு வீட்டில் தலை வாசலில் நின்று உன்னைப் புகழ்ந்தோம். உன் மலையைப் பாடினோம். அப் பாடலைக் கேட்டு கொண்டிருந்தாள் மங்கை ஒருத்தி. அவள் கண்களிலிருந்து நீர் பொங்கியது நில்லாமல் அருவி போல் ஓடியது.