மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/வில்லாளன் ஓரி

விக்கிமூலம் இலிருந்து

56. வில்லாளன் ஓரி

ஒரு வேடன், காட்டிலே ஒர் யானையைக் கண்டான். அது, அவனைக் கொல்ல ஓடிவந்தது. அவன் அதன் எதிர் நின்று தன் வில்லை வளைத்து, ஒர் அம்பை யெறிந்தான். அது, யானையின் வயிற்றிற் புகுந்து சென்றது. அம்பு அத்துடன் வேகம் அடங்காது யானையைக் கொல்லக் காத்திருந்த புலியின் மேற் பாய்ந்து ஊடுருவியது. அதற்குமேல் அவ்வழியில் ஓடிவந்த புள்ளிமானைக் கொன்று, அதன் உடலையும் கிழித்துக்கொண்டு சென்று கடைசியில் உடும்புப் புற்றிற் பாய்ந்து உடும்பைக் கொன்று சினம் தணிந்தது.

அத்தகைய வில் வித்தையைக் கற்ற அவன் யார் அவன்தான் ஒரியோ?

ஆம், அவனாகத்தான் இருக்க முடியும்.

பாணர்களே, முழவுக்கு மண் அமையுங்கள். யாழிலே பண் அமையுங்கள். பெரும் வங்கியத்தை வாசியுங்கள். கல்லியை எடுங்கள். சிறு பறையை அறையுங்கள். பதலையின் ஒரு முகத்தை மெல்லக் கொட்டுங்கள். கரிய கோலைக் கையிலே தாருங்கள். யான்பாடுவேன். என்றார் வன்பரணர்.

ஒரி இசை வெள்ளத்தில் மிதந்தான். பாணர் குழாம். பொருள் வெள்ளத்திலே மிதந்தது