மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/வீரத்தாய் கூறினாள்

விக்கிமூலம் இலிருந்து

113. வீரத்தாய் கூறினாள்

“அம்மா” என்று அழைத்து கூப்பிட்டுக் கொண்டே வந்தான் போர் உடை அணிந்த மகன்.

“கண்மணி, உட்கார்” என்றாள் தாய். “சொல்வதைக் கவனமாகக் கேள். மகனைப் பெற்றெடுத்து வளர்ப்பது தாயின் கடன். அதனைச் செம்மையாகச் செய்து விட்டேன். கல்வி அளித்துச் சான்றோன் ஆக்குதல் தந்தை கடன். உன் தந்தையும் தன் கடமையைச் செய்துள்ளார். கொல்லன் கடமை வேல் வடித்தல் உன் கைவேல் அதனைக் காட்டுகிறது. மன்னனும் உனக்கு நல்வாழ்வ. அளிக்கத் தவறவில்லை.

“தாயே, நான் என் கடமையைச் செய்யப் புறப்பட்டுவிட்டேன். வாழ்த்தி விடை கொடுங்கள்” என்றான்.

“போருக்குப் போய்வா. களிறு எறிந்து பெயர்தல் உன் கடன்”