வரலாற்றுக் காப்பியம்/லெமூரியா
Jump to navigation
Jump to search
லெமூரியா
பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை என்று
பாரதி சொன்னான் ஆயினும் என்னால்
கடல் கொண்ட தென்புலத்தை மறப்பதற்கு இல்லை
மண்ணியலார் சொல்லுகின்ற வரலாற்றின் படிக்கு,
இன்று இந்து மாக்கடலாக இருக்கின்ற
நீர்ப்பரப்பே நிலப்பரப்பாக இருந்தது ஒருநாள்
இமயமென்னும் நெடுவரையும் அன்றில்லை
சிந்து கங்கை சமவெளியும் தோன்றவில்லை
ரஜப்புதன பாலை நிலம் ஓருபெருங்கடலே
மேற்கே மோரீசுக்கு அப்பாலும் நீண்டு
கிழக்கில் சாவகம் சுமத்திரையைத் தாண்டி
வடக்கில் விந்தியம் வரம்பாக
தெற்கில் தென்பாலி நிலங்கடந்து
விரிந்து கிடந்த பெருநாடே லெமூரியா