வள்ளலார் பாடல்கள் - தெரிவுசெய்யப்பட்டவை

விக்கிமூலம் இலிருந்து

வள்ளலார் பாடல்கள் தெரிவுசெய்யப்பட்டவை[தொகு]

பாடல் 01 (உருவராகியும்)[தொகு]

கடவுள் ஒருவரே என்றுகூறல்


(அறுசீரடி ஆசிரியவிருத்தம்)


உருவ ராகியும் அருவின ராகியும் உருவரு வினராயும்
ஒருவ ரேயுளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவ ராமென்றும் மூவரே யாமென்றும் இயலும்ஐ வர்களென்றும்
எருவ ராயுரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமோ. -(ஆறாந் திருமுறை- தனிப்பாடல், 160.)


பாடல் 02 (உழக்கறியீர்)[தொகு]

ஒன்றும்அறியாதவன் இறைவன்பற்றிப் பேசல்


(எண்சீரடி ஆசிரியவிருத்தம்)


உழக்கறியீர் அளப்பதற்கோ ருளவறியீர் உலகீர் ஊரறியீர் பேரறியீர் உண்மையொன்று மறியீர்
கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக் கேதமற நடிக்கின்ற பாதமறி வீரோ
வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க வறிவீர் வடிக்குமுன்னே சோறெடுத்து வயிற்றடைக்க வறிவீர்
குழைக்கறியே பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே குழம்பேசா றேயெனவுங் கூறவறி வீரே. (ஆறாந் திருமுறை- தனிப்பாடல், 161)


பாடல் 03 (அன்பெனும்பிடியுள்)[தொகு]

அன்பே கடவுள்


(எழுசீரடி ஆசிரியவிருத்தம்)


அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே அன்பெனுங் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடுங் கடலே அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.