வார்ப்புரு:நாள் ஒரு இலக்கியம்
தோற்றம்
|
மு. கருணாநிதி எழுதிய "ரோமாபுரிப் பாண்டியன்".
கரிகாற் சோழனும் பெருவழுதிப் பாண்டியனும் ஆட்சி செலுத்திய காலத்தில் இருந்து ரோமாபுரி வரை நீண்டு செல்லும் இந்த வரலாற்று நாவல், தமிழக அரசியலின் சிக்கல்கள், பாண்டிய வேளிர்குடியின் உள்முரண்பாடுகள், மக்களின் வாழ்க்கை நிலைமைகள், சமணம் பௌத்தம் போன்ற மத நிலைமைகள், மற்றும் தமிழகத்திற்கும் ரோம பேரரசுக்கும் இடையிலான வணிக உறவுகளை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. முத்துநகை, தாமரை, செழியன், நெடுமாறன், சீசர், ஆண்டனி, ஜூனோ போன்ற கதாபாத்திரங்கள் வழியாக காதல், துரோகம், அரசியல் சதிகள், வீரம் ஆகியவற்றை விரிவாகச் சொல்லும் இந்த நாவல், கல்லணை கட்டுதல் முதல் அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல் வரை பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் புதிய வண்ணங்களில் வெளிப்படுவதைக் காணலாம். (மேலும் படிக்க...)
|
