விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2016/20

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"அங்கும் இங்கும்" 1968ஆம் ஆண்டு திரு. நெ. து. சுந்தரவடிவேலு எழுதியது.

திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் சோவியத் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். சிறந்த கல்வி அதிகாரியான அன்னார், சோவியத்து ஒன்றியத்தின் முன்னேற்றங்களையும். அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் வியந்து பாராட்டுகின்றார்.

நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் "புதிய ருஷியா" என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது.

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்
றுலகறியக் கூறி விட்டார் ;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போ
தடிமையில்லை அறிக என்றார்;

என்னும் அடிகள் எப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. பின்னர், லெனின் எழுதிய நூல்களைக் கற்றபோது, என்றைக்காவது ஒரு நாள், அடிமைத்தளைகளை அறித்தெறிந்து

(மேலும் படிக்க...)