- ஔவையார் தனிப்பாடல்கள்
- அரியது
- பாடியவர்: ஔவையார்
- அரியது கேட்கின் வரிவடி வேலோய்
- அரிதரிது மானிடர் ஆதல் அரிது
- மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
- பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
- பேடு நீங்கிப் பிறந்த காலையும்
- ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
- ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
- தானமும் தவமும் தான்செயல் அரிது
- தானமும் தவமும் தான்செய்வ ராயின்
- வானவர் நாடு வழிதிறந் திடுமே. 58
|
|