விநாயகர் ‌தெய்வப்புகழ்

விக்கிமூலம் இலிருந்து

விநாயகர் தெய்வப்புகழ்


தந்தன தனதன தந்தன தனதன

    தந்தன தனதன ...தனதான

மங்கல வடிவுடை  அம்பிகை உமையவள்

    சங்கரி அருளிய  .... முதல்வோனே

சங்கரன் அருளிய செங்கனி  அடியவர்   

அன்புடன் தரும்அவல் ... இளநீரும்

பொங்கலும் பொரிவடை சுண்டலும் அதிரசம்

உண்டிடும் கரிமுக .....  வடிவோனே

செந்தமிழ் அமுதினை  அன்பனும் எழுதிட

    சந்தமும் அருளிட   ..... வருவாயே

மின்னிய நவமணி அம்புஜ அறுகையும்

சென்னியில் அணிதிரு .... கணநாதா

தந்தன திமிதிமி திந்திமி ஜதியுடன்

சந்தமும்  நடமிடும் .....  சிவபாலா

கண்ணனின் பெருமையை அம்முனி இசையுடன்

    தந்திட எழுதிய  .... புலவோனே

கந்தனும் துதிசெய  மங்கையும் பயமுற

   வந்துமுன் பிளிறிய     ..... பெருமாளே

"https://ta.wikisource.org/w/index.php?title=விநாயகர்_‌தெய்வப்புகழ்&oldid=1403762" இலிருந்து மீள்விக்கப்பட்டது