வீரராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

வீரராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி[தொகு]

திருவளர் திரள்புயத் திருநில வலயந்
தன்மணிப் பூணெனத் தயங்கப் பன்மணிக்
கொற்றவெண் குடைநிழற் குவலயத்துயிர்களைப்
பெற்ற தாயினும் பேணி மற்றுள
அறைகழ லரையர்தன் னடிநிழ லொதுங்க
உறைபிலத் துடைகலி யொதுங்க முறைசெய்து
விரைமலர்த் தெரியல் விக்கலன் றன்னொடு
வரிசிலைத் தடக்கை மாசா மந்தரைக்
கங்க பாடிக் களத்திடை நின்றுந்
துங்க பத்திரை துரத்தி யங்கவர் (10)
வேங்கைநன் னாட்டிடை மீடுமவர் விட்ட
தாங்கரும் பெருவலித் தண்டுகெடத் தாக்கி
மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச்
செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவ
னொருமக ளாகிய விருகையன் றேவி
நாகலை யென்னுந் தோகையஞ் சாயலை
முகத்தொடு மூக்குவே றாக்கிப் பகைத்தெதிர்
மூன்றாம் விசையனு மேன்றெதிர் பொருது
பரிபவந் தீர்வனெனக் கருதிப் பொருபுனற்
கூடல் சங்கமத் தாகவ மல்லன் (20)

[தொகு]

மக்க ளாகிய விக்கலன் சிங்கண
னென்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை
வென்றடு தூசிமுனை விட்டுத் தன்றுணை
மன்னருந் தானும் பின்னடுத் திருந்து
வடகட லென்ன வகுத்தவத் தானையைக்
கடகளி றொன்றாற் கலக்கி யடல்பரிக்
கோசலைச் சிங்கனைக் கொடிபட முன்னர்த்
தூசிவெங் களிற்றொடுந் துணித்துக் கேசவ
தண்ட நாயகன் தார்க்கேத் தரையன்
திண்டிறல் மாராயன் சினப்போத் தரைய (30)
னிரேச்சய னிகல்செய்பொற் கோதைமூ வத்தியென்
றார்த்தடு துப்பி லநேகசா மந்தரைச்
சின்ன பின்னஞ் செய்து பின்னை
முதலி யான மதுவண னோட
விரித்த தலையோடு விக்கல னோடச்
செருத்தொழி லழிந்து சிங்கண னோட
அண்ணல் முதலிய அனைவரு மமர்போர்ப்
பண்ணிய பகடிழிந் தோட நண்ணிய
ஆகவ மல்லனு மவர்க்கு முன்னோட
வேகவெங் களி்ற்றினை விலக்கி வாகைகொண் (40)

[தொகு]

டங்கவர் தாரமு மவர்குல தனமுஞ்
சங்குந் தொங்கலுந் தாரையும் பேரியும்
வெண்சா மரையு மேக டம்பமும்
சூகரக்கொடியும் மகர தோரணமும்
ஒட்டக நிரையு முலோக சனமும் (45)
புட்பகப் பிடியும் பொருகளிற் றீட்டமும்
பாய்பரித் தொகையொடும் பறித்துச் சேயொளி
வீரசிங் காதனம் பார்தொழ வேறி
எழிறர வுலக முழுதுடை யாளொடும்
விசையமண மகுடமேய்ந்து எழில்கொள் (50)
தத்துமாப் புரவிப் பொத்தப்பி வேந்தனை
வாரணை வன்கழற் கேரளன் றன்னைத்
தார்சன நாதன் றம்பியைப் போர்க்களத்
தலங்கல்சூழ் பசுந்தலை யரிந்து பொலங்கழல்
தென்னவன் ஸ்ரீவல்லவன் மகன் சிறுவன்
மின்னவில் மணிமுடி வீரகேசரியை
மதவரை யொன்றா லுதைப்பித் துதகையிற்
கேரளர் தங்குலர செங்கீரை யோடும்
வேரறப் பறிந்தோடி மேல்கடல் வீழ
வாரண மருகுளி செலுத்தி வாரியி (60)

[தொகு]

லெண்ணருங் களிற்றின் இரட்டரைக் கவர்ந்த
கன்னியர் களிற்றொடுங் கட்டிப் பண்ணுப்
பிடியொடு மாங்கவர் விடுதிறை தந்த
வேழ நிரைகொண்டு சூழி புனல்
கொண்டாற் றிறவர் குறித்த வெம்போரில்
தண்ட நாயகர் தம்மில் திண்டிறல்
மல்லியண் ணனையு மஞ்சிப் பய்யனையும்
பில்குமதக் களிற்றுப் பிரமதே வனையும்
தண்டா ரசோகையன் தன்னையுந் தி்ண்டிறற்
சத்தியண் ணனையுஞ் சந்திவிக் கிரகப் (70)
பக்தி யண்ணன் றன்னையு மத்தகு
தேமரு தெரியல் வீமயன் றன்னையுஞ்
மாமதி வங்கா ரனையும் நாமவேற்
கங்கனை நுளம்பனைக் காடவர் கோனை
வம்புமத யானை வைதும்ப ராயனை ()
யிருந்தலை யரிந்து பெரும்புனற் றானாது
கங்கை மாநகர் புகுந்தபின் திங்களின்
வழிவரு சளுக்கியிப் பழியொடு வாழ்வதிற்
சாவது சால நன்றென் றேவமுற்
றுன்னிய சிந்தைய னாகி முன்னம் (80)

[தொகு]

புதல்வருந் தானுமுதுகிட் டுடைந்த
கூடலே களமெனக் குறித்துக் கூடலில்
வாரா தஞ்சினர் மனனரலலர்
போர்ப்பெ ரும்பழிப் புரட்ட ராகவென்
றியாவரு மறிய வெழுதிய சபத ()
மேவரு மோலை விடையொடுங் கொடுத்து
இரட்ட பாடிப் புரட்டரில் மேதகு
கங்கா கேத்தனை யேவ ஆங்கவன்
வந்தடி வணங்கி வாசக முரைத்தலும்
சிந்தையு முகமுந் திருப்புய மிரண்டும் (90)
ஏந்தெழி லுவகையோ டிருமடங்கு பொலியப்
போந்தப் போர்க்களம் புகுந்து கரந்தையில்
வல்லவர் கோனை வரவு காணாதவன்
சொல்லிய நாளின் மேலுமோர் திங்கள்
பார்த்தினி திருந்த பின்னைப் பேர்த்தவன் ()
கால்கெட வோடி மேல்கட லொளித்தலுந்
தேவ நாதனுஞ் சித்தியுங் கேசியும்
மூவருந் தனித்தனி முதுகிடப் பாவரும்
இரட்ட பாடி ஏழரையிலக்கமும்
முரட்டொழி லடக்கி முழங்கெரி மூட்டி (100)

[தொகு]

வெங்கதப் புலியேறு வியந்து விளையாடத்
துங்கபத் திரைக்கரைச் செயபத் திரத்தூண்
நானிலம் பரச நாட்டி மேனாள்
வந்தவப் புரட்டனை வல்லவ னாக்கிச்
சுந்தர கண்டிகை சூட்டியக் குந்தளத்
தரசனும் மக்களும் ஐம்மடி யஞ்சித்தன்
புரசை யானைப் புழைக்கையிற் பிழைத்திவ்
வுலகெலா மறிய ஓடிய பரிசொரு
பலகையிற் பழுதற எழுதிய பின்னை
சார்த்தின வுரையுஞ் சளுக்கி பதமேற்ற (110)
பூத்தள மாவொடு புட்டில் பேர்த்து
தாம்கைக் கொண்ட வேங்கைநன் னாடு
மீட்டுக் கொண்டலான் மீள்கிலங் கேட்டுநீ
வல்ல னாகில் வந்துகாக் கென்று
சொல்லெனச் சொல்லிய போக்கி எல்லையங்
கடுத்தவத் தானை எழில்விசய வாடையோ
டடுத்த பேராற்றில் வந்து தடுத்த
சனநாதனையுந் தண்டநா யகனாம்
இனமார் கடக்களிற் றிராசமய் யனையும்
திப்பர சனையு முதலாக வுடைய (120)

[தொகு]

வப்பெருஞ் சேனையை யடவியிற் பாய்ச்சிக்
கோதா விரியில்தன் போதக நீருணக்
கலிங்க மேழுங் கடந்த புலிவலம்
பொறித்த விமய மகேந்திரத் தளவும்
மேவருந் தானைத் தாவடி செலுத்தி (125)
வேங்கை நன்னாடு மீட்டுக் கொண்டுதன்
பூங்கழற் கடைக்கலம் புகுந்த படைக்கலத்
தடக்கை விசயா தித்தற் கருளி
இசைகொடு மீண்டுவிட் டருளி யிகலிடைப்
பூண்டசெயத் திருவொடுங் கங்காபுரி புகுந்தருளி (130)
அங்கே ராசாதி ராசன் ராசராசனெனத்
தராபதி யராகத் தமனியத் தியற்றி
அப்பதி மன்ன ரடிதொழு தேத்த
இனமணிப் பீடத்திருத்தி முனையிடை
வேங்கை நன்னாட் டிடைக் கொண்ட
இருநிதிப் பிறக்கும் வரிசையிற் காட்டி
ஆழியு நிகளமும் கழற்றி ஆங்கவர்
வாழிய விரதமு மாற்றி ஈழத்
தலைகட லடையாது பலகலஞ் செலுத்தி
மாப்பெருந் தானை ஏற்ற காப்புடைக் (140)

[தொகு]

கடல்வளை யரணத்து வெல்சமந் தொடங்கியச்
சிங்களச் சேனை மங்கப் பைங்கழல்
குருகுலத் தரையனு முருமெனப் பொருசினத்தால்
சாமந்தனும் பட்டுவிழக் கெட்டுடைந் தாற்றாதோர்
ஓசைத் தரையி னோடத் தராபதி
விசைய பாகுவுந் திசைகெட ஓட
மற்றவன் தேவியைப் பற்றி வென்று
... முதலாகிய அளப்பருங் குலதனம்
மணியின முடியொடு வாரித் திணிமதில்
இலங்கயுந் தனதே யாக்கித் தெங்காகந் (150)
தாண்டிக் கொண்டையில் மீண்டுமச் சளுக்கி
பண்டையில் இரட்டிப் பகட்டொடும் விடு...
... தடுத்து கண்டாரில்
மதியாகையன் மாமரயன் மநுமக் கண்டயன்
கட்டங்கிள...க் கூற்றுகவதி கைக்காமயன் ()
... கொண்டயன் ஆச்சீதரன்
பற்கொல்லு...முயட்டிக்கோ... யன் முதுலினர்
மதமழைப் பொருமிடி முதுகிட்டு வாசியோடக்
கோ... ஓட்டுமடையன் முதலினர்பாத சாமந்தரோடு
ஐங்களி றிழந்தோட ஆடற்புரவிளங்க கரியு (160)

[தொகு]

அரிவையர் குழாத்தொடு மகப்படப்பிடித்துப்
பண்டு போலப் பரணியுங் கொண்டு
தண்டா லமைய துன்னமா ராயன்
தானுமப் பாகாகன கேசவன் ....
யோதையும் பதாகின் இடந்தங்கு சிங்கணன் ()
... ... .... ....
சோழிய வரையனென் றேழ்பரி யானை
மிக்குறு மந்தர பூச...
புறக்கிகல் புலிசூட்டுக் கல்லில் செயத்தம்பம்
நாட்டித் தெ... தன்முதல் ... (170)
.... சனைக் கலிங்க
மிடையப் படைக்கட லேவி வடதிசை
சக்கரக் கோட்டத்து மிக்குடன் றெழுந்த
சளுக்கியன் றானையைக் கனலெரி நூறிச்
சோனய்ய நகர்சிலைக் சோமயன் எறியமன் ()
வாமவேல் ஆதித்த பன்மன் றாமிவர்
குறைத்தலைக் குழாத்தொடுங் குனிப்ப தறைப்ப...
ஆதச்சப.. ... மலியும் சாகயன்னும்
வச்சிரப் பைம்பூண்ம... நுமனும்
வைதும்பனுந் தேவ நாதனுந் தேவிகொ (180)

[தொகு]

...ண்ண கடமெட்டும்
பகுதியு மொட்டகத் தொகுதியும் பரிகலப்
பரிசந்திப் பகுதியும் வரிசையில் கொள்ளையில்
கூ.... பத்துள்ளழிந் தோடு...
நாதன்தேவி காவியில் வாளி ()
மண்ணடுங்க...ண் காயப்பையுந் தம்பியும்
விச்சத... முதல் தும்பயவதி குழுந்
தோகைய ரீட்டமு மாக்களத் தகப்படப்
பிடித்து தி... குற்ற...லமையன் மக்களை
ஒதுக்கி எல்லை கடந்து நிலையிட்டுக் (190)
களகாப்பிலி யிருதற் கிடந்த வடதிசை
இமயத் தொடுங் கிடந்த சேதுவரம் பாகச்
செங்கோல் செலுத்தி...
வேத நீதியை விளக்கி மீதுயர்
வீர்த் தணிக்கொடி தியாகக் கொடியொடும் (195)
ஏற்பவர் வருகென்று நிற்பக் கோத்தொழில்
உரிமையி னெய்தி அரைசுவீற் றிருந்து
மேவரு மனுநெறி விளக்கிய கோவிராசகேசரி வர்மரான
உடையார் ஸ்ரீவீர ராசேந்திர தேவர்க்கு யாண்டு...