வெண்பாப் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
                                                             வெண்பா
                                    பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
                                               பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை
                                                             பாடல் 62
                                         தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 138 முதல் 146
                                         பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்


1
சென்னிமலை வேலவர்க்குச் சேர்ந்த கொம்பு இரண்டுண்டு
கன்னிக்குற வள்ளிக்குக் கால் இல்லை – முன்னமே
ஆட்டுக்குக் கொம்பில்லை யானைக்குக் கால் இல்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார். 
2
தார்க்கொன்றை தாவென்றேன் தா ஏழில் ஒன்று என்றான்
ஊர்க்கஞ்சி நான் மூன்றில் ஒன்றென்றேன்- ஆர்க்கும்
பொதுவென்றான் பூவென்றேன் போயினான் தோழி
இதுவோ நம்மீசன் இயல்பு.
3
பறவை நாய் நாகம் பகை விலங்கு பங்கம்
செறியும் இருணாரஞ்சி தடன்- குறிகிழவன்
என்றுரைத்த வீரைந்துமேர் தண்டத்திற் பண்பாய்
ஒன்றுமென உரைப் பரால்.
4
பரியூர்வார் பாலருந்தல் பண்பாம் உடற்கு
கரியூர்வார் பெண்ணின் பங்காணல்- விரியும்
சிவிகை யூர்வார்க் குமைத்தலின் பஞ்சேட் செல்வார்
பசுவீய வுண்டல் பயன்.
5
தக்கசகுனஞ் சபதஞ் சாமுத்திரியஞ் சொன்
மிக்கவசரீரி கனாவென்று அறைந்தும்- இக்கலியில்
கூடினுங் கைகூடி வருங் கூடாதொழிந் தொருகால்
வீடினும் வீடி விடும்.
6
நக்கனார் சோணகிரி நாதனார் வேள்வியிலே
தக்கனாரைத் தகர்த்த தக்கனார்- பொக்கைவாய்
ஆக்கினார் சூரியனை யம்புலியைத் தேய்த்தரியைத்
தாக்கினார் ஓடோடத் தான்.
7
ஓடினான் என்பது உணர்ந்தும் உனக்குச் சரியா
நாடினார்க்கு என்ன நரகமோ-நீடியே
ஆலவிடந் தோன்றிய போதம்பல வாணா நெடிய
மாலவிடஞ் சஞ்சரி யாதே.
8
அசநமிளைப் பகற்றா தன்னையே நம்பால்
வசனமிது தவறா வாய்மை-இசைநாகைச்
சின்னப்பால் வெண்மதியஞ் சேரிமையத்தே பிறந்த
அன்னப் பாலிங்கு வந்தாலாம். 
9
தலையிலிரந் துண்பான் தன்னுடலில் பாதி
மலையின் மடமகளுக் கீவான்- உலையில்
இருப்புவன மேனியனே யென்றாலோ வாமாம்
திருப்புவணத் தீசன் திறம்.
10
ஆச்சரியந் தென்னமரம் அத்தனையுங் குத்துமுலை
காய்ச்சிருக்குந் தென்குடந்தை காவலர்- மாச்சன்
வரக்குப் பையாநீ மருவா நாளெல்லாம்
சரக்குப் பையாமே தனம்.
11
கல்லும் உருத்தாது காலின் முட்டையாது
எல்லை மார்த்தாண்டன் சூடேறாது-தொல்லைவரு
மாலை யிருளில் வழி நடக்கக் கூசாது
காலில் செருப்பிருந்தக் கால்.
12
தந்தைபோய்த் தாய்போய்த் தமர்போயென் சுற்றமும்போய்
வெந்த புரியாகி விட்டேனே- முந்தவே
ஆழாழி நஞ்சுண்ட வாபற்சகாய னெனும்
பாழாவான் கண்ணேறு பட்டு.
13
கைக்குடமும் ரெண்டு கனக்கும்பக் குடமும்
முக்குடமுங் கொண்டான் முறியாதோ- மைக்குழலீர்
வேய்க்காற்றினால் விளங்கும் வீரனந்தி மாநகரில்
ஈக்காற்றுக் காற்றா விடை.
14
வையம் புகழுமலர் ஆயிரம் எடுத்துக்
கையிலொரு மாமலரைக் காடாமல்- வையகத்தில்
செங்கண் மாலீசன் திருவடிக் கெண்ணா யிரமாத்
தங்கண் மலர்சாற்றி னான்றான்.
15
பாம்புசேர் தோளிணையாள் பாளயத்து மாமாரி
சாம்பசிவன் தன்னடியைச் சாராரை-வேம்பின்
இலையை யுடுத்தியவர் ஈனமானம் போக்கித்
தலையில் விளக்கேற்றி வைப்பாடான்.
16
அட்டமியில் ஓதினால் ஆசானுக் காகாது
சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும்-கெட்டவுவா
வித்தைக்கு நாசமாம் வெய்ய பிரதமையில்
பித்தரும் பேசார் பிழை.
17
ஆயிரம் பாக்கன்ன முலை யன்னநடைக் கன்னிபதி
னாயிரம் பாக்கானாளுன் ஆசையினால்- நீயிரங்கி
வந்தாள வேண்டு மலைப் பழனி வேலவனே
சந்தாள வேறில்லைத் தான்
18
பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசஞ் செய்தோன்- அரப்பெரிய
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந் தீர்ந்தோன்
எஞ்சாப் பிதாக்க ளெனவெண்.
19
கானக் கடன்மல்லைக் கார்வண்ணன் தானுமால்
நானக் குழன்மடவீர் நானுமால்- ஆனக்கால்
தன்கையிற் சங்காழி தாமிருக்கப் போவதேன்
என்கையிற் சங்காழி யின்று.
20
கட்டி யடிப்போர்க்குங் கன்மீதில் ஏற்றுவர்க்கும்
எட்டி யடிப்போர்க்கும் ஈவரே- திட்டமுடன்
பாடுவோர்க் கீயாரே பல்லுதிரத் தாடையினிற்
போடுவோர்க் கீவார் பொருள்.
21
செய்யாள் கணவா செகராஜ சேகரா
ஐயா வடகங்கைக் காரியா- துய்யா
குடஞ்சுட்டுப் பின்போன கோபாலா முத்து
வடஞ்சுட்டுக் கண்டுயிலாண் மான்.
22
உன்றன் மகளை யொறுப்பதற்குக் காரணமென்
என்றன் மகடன் இயல்புகேள்- குன்றாச்
சிராப்பளியான் ஏறிவருஞ் சேவின் மணியோசைக்
கிராப்பளியுங் கொள்ளாள் இவள்.
23
நீரூருஞ் செஞ்சடை மேனீரூரும் பாம்பணிந்து
நீரூரிலே வந்த னீதியோ- நேரே
படவரவஞ் சாடப் பலியிடென வந்தால்
இடவரவஞ் சாளோ விவள்.
24
வாலைப் பொருந்துதலால் வல்லரவம் பற்றுதலால்
மாலையடுத்து நெடுவான் உறலால்- சோலைதிகழ்
உம்பர் பூசித்தருளும் ஒற்றியூரன் வரையில்
அம்புலியு நன் கருடனாம்.
25
அம்மையிலே யேறி யடியேன் இடர்தீர
இம்மையிலே வந்தென்னை யீடேற்றி- மும்மையிலே
எந்தப் பாவஞ் செய்தேன் அந்தப் பாவந்தீரக்
கந்தப்பா வந்திப் போகா.
26
எழுதரிது முன்னம் எழுதிய பின்னத்தைப்
பழுதற வாசிப்பரிது பண்பா- முழுதுமதைக்
கற்பரிது நற்பயனைக் காணபரிது கண்டக்கால்
நிற்பரிது தானந் நிலை.
27
ஏரேறு நீரேறும் எண்ணில் உயிர்க் குயிராம்
பாறேறுங் காலாற் படியளக்கும்- வீறேறும்
அன்னங் காணீசன் அரியயனுந் தாமன்று
துன்னுபுகழ் மாரியப்பா சொல்.
28
கோடுதிக்குங் கும்பமுலைக் கோதையரைக் கூடவென்றால்
மாடுதின்னி யென்னை மறுத்தானே- மாடுதின்னி
தன்பொழுதும் போச்சுதே தன்னந் தனித்திருந்த
என்பொழுதும் போச்சுதே யென்.
29
நெஞ்சடைந்த வேட்கை யெல்லா நீங்கி யிருவிழியும்
பஞ்சடைந்து உள்ளாவி படுமுன்னே- செஞ்சடையில்
வெள்ளாறா வெந்நாளும் வேள்விப் புகையாறா
நள்ளாறா வென்னா நவில்.
30
மூவர்கவி முன்னுறு முன்சோழ னைந்நூறு
நாவலர் மாணிக்கர் தலநாற்பத்தெட்- டோவறுசீர்
நூதன சிவாலயங்க னூற்றறுபதுங் கூட
ஓதவரும் ஆயிரத் தெட்டோர்.
31
நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
காலுந் தலையுங் கடைச்சாதி- மேலாக
ஒட்டு முதலெழுத்து மோது மூன்றா மெழுத்தும்
விட்டர் பரமனுக்கு வீடு.
32
முனியதட்டு முட்டீக்கு முன்னீ ரளக்கும்
கனியுதிர்க்குங் கவ்வுநாய் காக்கும்- தனிவழிக்குப்
பத்திரம தாக்கும் பயந்தீர்க்கும் பாம்படிக்கும்
கைத்தலத்தில் தண்டிருந்தக் கால்.
33
பகலோன் றெறுங்கிரணம் பாய்பறவை யெச்சம்
மிகமேலுறா தகற்றும் விண்ணின்- முகிலதனால்
பெய்யு மழையைத் தடுக்கும் பேரழகுமா மொருவர்
கையில் குடை யிருந்தக் கால்.
34
வந்தவளைக் கையாது வாய்முத்தந் தந்தருள்வாய்
தொந்தவளைக் கையா துவாரகையா- சந்துவளை
கோசையிடத் தானே குயிலோசைக் கஞ்சியுளத்
தாசையிடத் தானே யறிந்து.
35
அறிந்து தவிப்பாரை யருள்கோசை யான்மால்
செறிந்து தவிப்பாரைத் திருத்தும்- திறந்தழைந்த
வைகுந்தனூர் வாய்மட மன்னே கொவ்வை நிகர்
வைகுந்தனூர் வாய் மடுத்து.
36
மடுக்குஞ் சரமழைக்கும் வான்கோசை மாலே
விடுக்குஞ் சரமழைக்கு மேலாய்- முடுக்கும்
அநங்கனை யஞ்சங்க மடுத்தேனை யாள்வாய்
அநங்கனை யஞ்சங்க மலர்.
37
அலரோதி மத்தா னறைகோச மாலே
அலரோதி மத்தா லடிக்கும்-அலரோதி
நந்தனகத் தாளுறவே நண்ணி நின்றா யானடைந்தேன்
உந்தனகத் தாளுறவே யோர்ந்து.
38
ஓர்ந்தண்டரை யாளும் உத்தமநற் கோசையனே
ஈர்ந்தண்டரை யாளும் இந்திரையும்- சேர்ந்திலகு
தூயத்திருக் கறுப்பா தோற்றி யடியேனுடைய
மாயத்திருக் கறுப்பாய்  வந்து.
39
ஆகும் போதாகும் அனைத்தும் மதிவொழிந்து
போகும் போதெல்லாமும் போகுமே- வேக
நவசரம் பட்டார் போனலிந்து மடநெஞ்சே
அவசரம் பட்டா லாகுமா.
40
சல்லடைக் கண்ணாகித் தளர்ந்தாள் அருள் புரிவாய்
மல்லடையுங் கோசைநகர் வைகுந்தா- கல்லடையும்
பாந்தளிரை தேர்காலான் பாணம் வருத்துதலால்
மாந்தளிரைத் தேர்காலாண் மார்பு.
41
காரங்க மேனிக் கருணைக் கடலான்
சீரங்க நாதரே செல்வரே- நீரங்கே
அள்ளியுண்ட வெண்ணெய்க்கா வம்மை யடிப்பாளென்று
பள்ளிகொண்டால் போமோ பயம்.
42
படைப்பானுங் காப்பானும் பார்க்கில் அருணேசன்
படைப்பான் அயனென்னல் பாவம்- படைக்கிலயன்
ஐந்துதலையில் ஒன்றை யானறுத்த போதிலவன்
தன்றலையைப் பண்ணறி யான்றான்.
43
நாறுங் கடம்பு நடையுடையும் பாவனையும்
வீறும் உனக்கேன் பழனிவேலவா- ஆறுதனில்
வெட்டுண்டானுங் களையன் வெண்ணெய் தனையே திருடிக்
கட்டுண்டானுங் களம்மான் காண்.
44
தூது மதுரை துவரை கடையிடை முன்
ஓதுகின்ற மூவெழுத்தும் ஒக்குமோ- நீதி
செகராஜ சேகரன் வாழ்சிங்கை யெனுஞ்செல்வ
நகரா யிழையார் நகை.
45
பூங்கோதை மாதர் புனைகின்ற முத்தாரம்
வாங்கோங் குடிக்குவடு வென்றே- நாங்கள்
முலைக்கோடு அணிவதெல்லாம் முக்கண்ணான் சென்னித்
தலைக்கோடு பட்ட தழும்பு.
46
இவ்வரையும் ஆவிக்கு இரங்குவோர் தாமில்லை
ஐவரையுங் காத்தவ வனாதலினால்- மைவரைசொல்
வானிரங்கு முத்துகிருஷ்ண மன்னன் நமது தொண்டை
மானிரங்கு வானென்றாண் மான்.
47
வாரிதரளஞ் சொரிய மாமரையின் ஊடுருவிச்
சேரனமர் நாடளவுஞ் சேர்ந்ததே- மூரிமதன்
அம்போடு அலைகின்ற ஆயிழைக்கு நீகுதிரைக்
கொம்போ குலோத்துங்கா கூறு.
48
தேமிருக்கு மாந்தளிரைச் செந்தீவன மென்றும்
பூமுருக்கைத் தீப்பொறி யென்றும்- நாமிருக்கு
மாப்படுமே யென்றெண்ணி வாடிமனந் தளர்ந்து
கூப்பிடுமே அந்தக் குயில்.
49
காமனார் வீட்டினிலே கள்ளன் புகுந்தானே
சோமனாரைப் பாம்பு சூழ்ந்ததோ- மாமரந்தான்
தீப்பட்டு வேகுதோ தியாகேசர் நன்னாட்டில்
கூப்பிட்டதே யக் குயில்.
50
செந்தமிழோர் உய்யவன்பு செய்யவந்த சோழவள்ளல்
சந்ததமும் சேராநாடாழ் குழலே- வந்தனைசெய்
ஐங்கரனை வேலவனை யன்றழற்கண் வந்தவனைச்
சங்கரனை வாசுகியைத் தான்.
51
முக்கணன் வாழ்வெற்பை முறித்துவரி யிட்டகால்
முக்கணனை யப்பில்விழ மோதாதோ- முக்கணன்றன்
வேணிக்காகா மலர்வைத்து ஏகினான் மெல்லியலே
சாணிற் குறைந்தான் தலை.
52
சேலநகரே மதுரைச் சீர்ச்செழியனே செழியன்
சாலவதில் உள்ளோரே சங்கத்தார்- சீலமிகும்
கம்பால தேவன் கடம்ப வனவாசர்
தம்பாரி மீனாடசித் தாய்.
53
மங்கையர்கள் யோனிமிசை வைத்திருக்கும் ஆசைதனைப்
பங்குசெய்து நூற்றிலொரு பங்கெடுத்துக்- கங்கைமதி 
வேணியான் பாதார விந்தத்தில் வைத்தக்கால்
காணலாங் காணாக் கதி.
54
துர்ச்சனரும் பொன்னுந் துடியுந் துரகதமும்
அச்சமற முன்னிற்கும் ஆயிழையும்- நச்சரவும்
கண்டித்த வெள்ளும் கரும்பும் இளநீரும்
தண்டித்தார்க் கல்லோ சயம்.
55
புட்டவல் பட்டாணி பொரிதேங் குழலப்பம்
மட்டவிழுந் தோசை வடையுடனே- சட்டமுடன்
ஓயாமல் சோறுகறி யுண்டை யுண்டையாய் அடைக்கும்
வாயா நமச்சி வாயா.
56
குச்சிலிய மாதர் குயமுங் குவலயத்தோர்
மெச்சுதமிழ் மாதர் வியன்முலையும்- சிச்சீ
தெலுங்க மடமாதர் சிங்காரக் கொங்கைக்
கலிங்க மெனவே சொற்கவி.
57
இங்கிருக்க வென்றால் எமனொட்டான் இவ்விடம்விட்
டங்கிருக்க வென்றால் அயனொட்டான்- எங்குவைத்துப்
பேணுவேன் இவ்வுடலைப் பித்தா பிறைசூடும்
தாணுவே சொக்க நாதா. 
58
வெள்ளிமலை பொன்னின்மலை மேவமகிழ் வீடாகி
பிள்ளைகளோ புத்திசொலும் பிள்ளைகளாய்- தெள்ளுமுகம்
வாடாவடி வுடையாண் மாமனையாள் ஆனக்கால்
ஆடாரோ வொற்றி யப்பனார்.
59
அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றம்
குடியார்க் கெழுதிய கைச்சீட்டுப்- படியின்மிசைப்
பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீடசைசெய்து
முத்தி கொடுக்க முறை.
60
பரம ரகசியத்தைப் பாழான வாயால்
இரவு பகலெந் நேரமின்றிக்- கரனெரியக்
கூப்பிட்டுங் காணுமோ கோலமட நெஞ்சேமால்
பூப்பிட்டுங் காணாப் பொருள்.
61
காந்தனுக் கென்றன் கொடியகாம விகாரமெலாம்
போந்தறி வித்தால் உனக்குப் புண்ணியமாம்- சேர்ந்தோடும்
தேளிபட வாடுந் திரைக்கடலே மன்மதன்கை
வாளிபட வாடும் மனம்.
62
கம்பனென்றுங் கும்பனென்றுங் காளியொட்டக் கூத்தனென்றும் 
கும்பமுனி யென்றும்பேர் கொள்வாரோ- அம்புவியில்
மன்னாவலர் புடைசூழ் குடந்தையாரி யப்பன்
அந்நாளிலே யிருந்தக் கால்.
</poem>
"https://ta.wikisource.org/w/index.php?title=வெண்பாப்_பாடல்கள்&oldid=1410926" இலிருந்து மீள்விக்கப்பட்டது