பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அய்யன் திருவள்ளுவர்

அச்செடியின் உடல் பூராவும் இருக்கின்ற 'செல்' என்ற உயிர்ப்பு சக்தி, சூரிய ஒளியால் சூடான நீரில் இருக்கின்ற வெதவெதப்பை உறிஞ்சிக் கொள்ளுகிறது.

இவ்வளவு விபரங்களைத் தருகின்ற கலைமணி, இறுதியில் அறிஞர் அண்ணா அவர்கள் நீரால் சூழப்பட்ட கடற்செடியைப் போல, பாதகம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தியில் இருக்கின்றார். இந்நாட்டிலுள்ள பல கோடி ஏழை மக்களின் துன்பச் சூட்டை நன்குணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள், அந்தத் துன்பத்தை மட்டும் தான் உறிஞ்சி வைத்துக் கொண்டிருக் கிறார்.

"கடல் செடி, நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும், தன்னையே, மீனுக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதற்கும் உருவானதைப் போல, அறிஞர் அண்ணா அவர்கள் தன்னைப் பொது மக்களுக்கு அர்ப்பணித்தும், அவர்களது துன்ப வேட்காட்டைத் தான் உறிஞ்சுக் கொண்டும் வாழ்கிறார்” என, தான் முன்னர்ச் சொன்ன பொருளோடு அண்ணாவைத் தொடர்பு படுத்திக் காட்டும் நேர்த்தியே நேர்த்தி!

அண்ணாவைத் தென்றலாக்கும் அருமையைக் காணுங்கள். "தென்றலே! தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அறநெறிகளை ஏற்று, மாலை நேரமானதும் தமிழக வீதிகளை நோக்கி ஓடி வருகிறாயே - ஏன்?

மயக்கும் மாலைப் பொழுதான அந்தி நேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக் கூட்டங்கள் தோறும் நீ உலா வருகிறாயே! கூட்டத்தில் குழுமியுள்ள மக்களது உள்ளங்களையெல்லாம் நீ சிலிர்க்க வைக்கிறாய்! கவருகிறாய் கொள்ளை கொள்ளுகிறாய்! இதற்குக் காரணம் என்ன? உன்மீதுள்ள எல்லையற்ற பற்று. நீ வாடையா என்ன? - வெறுப்பதற்கு, தென்றல் அல்லவா? அண்ணாவின் அழகு தமிழ்ப் பேச்சை, மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றான தென்றலாக்கிக் காட்டியிருப்பது, தென்றலினும் குளிர்ச்சியை நமக்குத் தருகிறது.

அண்ணாவின் "கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு” என்பதிலே தன்னை முற்றிலுமாகப் பறிகொடுத்து நிற்பவர் புலவர் கலைமணி. இதோ அவரே கூறுவதைக் கேளுங்களேன்!

14