பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xii


அண்மை நாட்களில் மனமார்ந்த இலக்கிய மரபு போற்றி நான் படைத்திட்ட ‘கன்னித் தொழுவம்’ புதினத்தின் கதை நாயகியான பார்வதியை நான் என்றென்றுமே நன்றியறிவுடன் நினைவு கூர்வது உண்டு.

இப்போது, நான் நினைத்து மகிழவும், மகிழ்ந்து பெருமைப்படவும், பெருமைப்பட்டுப் பெருமிதம் அடையவும் டாக்டர் ரேவதி கிடைத்தாள்!

ரு செய்தி:

‘அவள் ஒரு மோகனம்’ என்ற இந்நவீனம் ‘தினத்தந்தி’ நாள் இதழில் அண்மையில் தொடரும் கதையாக வெளிப்படுத்தப்பட்டு அமோகமான பாராட்டுதல்களைப் பெற்றது. பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அதிபர் திருமிகு செவந்தி ஆதித்தன் அவர்களுக்கும் ‘ராணி’ ஆசிரியர் திருமிகு அ. மா. சாமி அவர்களுக்கும் நான் நிரம்பவும் கடமைப்பட்டவன் ஆவேன்.

அண்மையில் புத்தாண்டிலே நடைபெறவிருக்கும் என்னுடைய மணிவிழாவுக்கு ஆறுதலான ஒரு முன் அடையாளமாக வெளியிடப்படும் இந்த நவீனத்தை நல்ல முறையிலே சிறப்பாக வெளியிடும் மணிவாசகர் பதிப்புகத்தின் பதிப்பாசிரியர் வெற்றிச் செல்வர் - தமிழ்ப் பேராசிரியர் ச. மெ. அவர்களைத் தலைவணங்கிக் கை வணங்குகின்றேன்.

தமிழ்ப்படைப்பு இலக்கியத் துறையிலே கடந்த சில பல ஆண்டுகளாகப் பரவி வருகின்ற நச்சு நோய்க்கு ஆளாகாமல் தப்பிப் பிழைத்து ஆரோக்கியமான எழுத்துக்களை ஆர்வத்தோடும் அக்கறையோடும் ஆரோக்கியமாகப் போற்றி வருகின்ற உண்மையான இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை நான் மறப்பேனா?

வணக்கம்

சென்னை-600045 பூவை எஸ். ஆறுமுகம்

⚫ ⚫ ⚫