பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


ரேவதியின் ஊதாச் சோளி நனைந்து, ஈரம் ஆயிற்று; பற்களை ‘நறநற’வென்று கடித்துக் கொண்டாள். “மிஸ்டர்! கேலி பண்றீங்களா?... உங்களுக்கு இத்தனை நெஞ்சுத் துணிச்சலும் நெஞ்சழுத்தமும் வந்திடுச்சா? மறுபடியும் நான் ஞாபகப்படுத்துகிறேன். நான் ரேவதி... மிஸ் ரேவதியாக்கும்!” விழிகளில் ரத்தம் சூடேற்றியது; ஆத்திரத்திலும் கூட, முகப்பருக்கள் கவர்ச்சியை சிந்த மறக்கவில்லை!

அந்தரங்கக் கடிதமும் சுக்கல் நூறாகக் கிழிந்தது.

விதியின் எழுத்துக்கள் காற்றில் பறந்தன!

ரேவதி சிரித்தாள்.

சிரித்தது ரேவதிதானா? ரேவதியேதானா!...

எழுந்தாள்.

நடந்தாள்.

பீரோவின் இரகசியமான டிராயரை இழுத்தாள்.

அந்தத் திருமணப் படத்தை திரும்பவும் எடுத்து திரும்பவும் பார்த்தாள். ஆத்திரமும் சோகமும் முட்டி மோத, நெடுமூச்சு நீளமாக வெளியேறியது.

அந்தக் கடிதத் துண்டுகள் காற்றில் தத்தளித்தன.

“மனசாட்சியாம்... மனசாட்சி! இந்த மனுஷன் குழிப் பிணத்தைத் தோண்டியெடுத்து ஒப்பாரி வைக்கிறதாட்டம், தான் அடைஞ்சிட்ட தோல்வியோட ஆத்திரத்திலே என்னமோ கிறுக்கியிருக்கார்! இந்த ஏழு வருஷத்திலே இது எட்டாவது கடிதம்.” நடந்தாள் ரேவதி.

கணங்கள் பூ நாகங்களாக நெளிந்தன.

அவளுக்கு இப்போது தேவை : வடிகால்.

‘ராயல் டெப்ளமட்’ தேடி வந்தது.

ராஜதந்திரமா தேடல்தான்!

அ. மோ-2