இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. அன்று நடந்தது!
இதயம் ஏன் இப்படி படுவேகமாகத் துடிதுடிக்கிறது?
சொல்லி வைத்த மாதிரி கனகச்சிதமாக அந்தப் படுக்கை அருகில் வந்து நிற்கிறாள், டாக்டர் ரேவதி.
மருந்து நெடி.
கொத்துக் கொத்தாக மலர்ந்திட்ட மல்லிகைப் பூவாய்த் தோன்றினாள், நர்சு தமிழரசி.
“தலையின் முன் பகுதியிலே பலமாய் அடி. கட்டுப் போட்டு, மாத்திரை கொடுத்து, ஊசியும் போட்டுட்டேன்.”
ஞானசீலனுக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை.
நெஞ்சை அடைத்தது; ஒரு வாய் தண்ணீர் குடித்தாள்.
முந்தானை காற்றிலே பறந்தது. பறந்தால் பறக்கட்டும்!
‘ராயல் சாலஞ்ச்’ கண்ணடித்தது.
சே...!
ரேவதி கண்களை மூடிக் கொண்டாள்.
மனத்தின் மனம் புதுக்கோட்டைக்கும் சென்னைக்குமாக அலைந்து திரும்பியது, மீண்டும், ஆற்றாமை மேலிட்டது. நெடுமூச்சு வெளிப்பட்டது.