உ
சிவசிவதிருவருள்திரு | திருவண்ணமலை ஆதீனம் |
தெய்வசிகாமணி பொன்னம்பல | குன்றக்குடி - 630 206 |
தேசிக பரமாசாரிய சுவாமிகள் | சிவகங்கை மாவட்டம் |
[ஆதீனகர்த்தர்] | தமிழ்நாடு |
போன் | |
குன்றக்குடி - 04:577-54267 | |
காரைக்குடி - 04555-37768 | |
நாள் : 20.8.99 |
கலைமணி தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் “ஆறுமுகமான பொருள்” என்ற நூலின் வாயிலாக நம்மை ஆறுமுகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார். தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் மலையின் உச்சியிலும் அலையின் ஓரத்திலும், சோலையின் நடுவிலும் என்று, எங்கும் கோயில்கொண்ட அருமை போற்றுதற்குரியது. ஆறுமுகத்தை அறிவியல் உண்மையோடு தொடர்புபடுத்தியிருப்பது ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுகிறது. "நாமார்க்கும் குடி அல்விலாம்” எனும் பாடல் பற்றிய ஆசிரியரின் கருத்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.
செந்தூர் முருகன் காட்டும் அற்புதம் மகிழ்ச்சிக்குரியது. சூரன்வதை என்பது கொடிய அரக்க உடலை அழித்தது மட்டும் அல்ல. நம் உள்ளத்தில் மறைந்துள்ள ஆசை, கோபம், வஞ்சகம், பொறாமை முதலிய குணங்களை மாற்றுவதின் மூலமே அன்பினை அடைய முடியும். அன்புதான் அனைத்திற்கும் மூலம் என்பார்கள். நம்மிடம் உள்ள அரக்க குணங்கள் ஒழிய அருள் உள்ளம் மலரும்.
காவடி எடுக்கும் அருமைப்பாட்டை விளக்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. முருகப்பெருமான் சூரபதுமனை மயிலாகவும், சேவற்கொடியாகவும் மாற்றியது பற்றிய விளக்கம் பெருமைக்குரியது. குமரகுருபரருக்கு அருள்பாலித்த அருமைப்பாடு எண்ணி எண்ணி நெகிழத்தக்கது. அரக்கனுக்கும் அருள்பாலித்த அருள் உள்ளம் எண்ணி
திருமுறைகளே நமது மறை ★ திருக்குறளே நமது பொதுமறை