இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உ
சிவசிவதிருவருள்திரு | திருவண்ணமலை ஆதீனம் |
தெய்வசிகாமணி பொன்னம்பல | குன்றக்குடி - 630 206 |
தேசிக பரமாசாரிய சுவாமிகள் | சிவகங்கை மாவட்டம் |
[ஆதீனகர்த்தர்] | தமிழ்நாடு |
போன் | |
குன்றக்குடி - 04:577-54267 | |
காரைக்குடி - 04555-37768 | |
நாள் : 20.8.99 |
இன்புறத்தக்கது. மிகச் சிறப்பாகக் குமரக் கடவுளின் அருள்பாலிக்கும் அன்பு உள்ளத்தையும் தெளிவுபட எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
அழகுக் கடவுள் குமரனை அழகும் அன்பும் அருளும் ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
இந்நூலைத் தங்கள் தந்தையார் கனவு நனவாகும் வண்ணம் வெளியிடக் கடும் முயற்சி செய்த திருமதி.ராஜேஸ்வரி அம்மையார் அவர்களின் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் இணைப்பாக எழுதியுள்ள அருமை பாராட்டுக்குரியது. இந்நூலைச் சிறப்பான முறையில் வெளியிட உதவிய பதிப்பகத்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி, வாழ்த்துக்கள்!
- என்றும் வேண்டும் இன்ப அன்பு.
பொன்னம்பல அடிகளார்
திருமுறைகளே நமது மறை ★ திருக்குறளே நமது பொதுமறை