உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற்புத சாமி நல்லவராம்.
அவர்க்கு இரண்டு மனைவியராம்.

மூத்தவள் அவரைக் காட்டிலுமே
மூன்று வயது முதிர்ந்தவளாம்.

இளையவள் அவரது வயதைவிட
எட்டு வயது குறைந்தவளாம்.

ஒருநாள் இளையவள் அவர்தலையை
உற்றுப் பார்த்தனள்; பார்த்ததுமே,

“ஐயோ! தலைமயிர் நரைக்கிறதே.
அனைவரும் என்ன சொல்லிடுவர்?

‘கிழவரை மணந்த குமரி’யெனக்
கேலி செய்வரே ! என்செய்வேன்?”

என்றே அவளும் எண்ணினளே;
இதற்கொரு வழியும் கண்டனளே.


17