உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படி அற்புத சாமியுமே
இதனைப் பொறுத்தனர்? யானறியேன்;

தினம்தினம் மனைவியர் இருவருமே
சிலசில மயிர்களை அகற்றியதால்

குறைந்தன; குறைந்தன; வெகுவிரைவில்
மறைந்தன தலைமயிர் யாவையுமே!

கத்திகள் எவையும் இல்லாமல்
கைத்திறம் ஒன்றே துணையாக

மொட்டை அடித்தனர் அவர் தலையை,
மூத்தவள், இளையவள் இருவருமே!

‘சீப்பும் எண்ணெயும் இனிவேண்டா.
சிக்கன மாக வாழ்ந்திடலாம்’

என்றே அற்புத சாமியுமே
எண்ணிட வில்லை, அச்சமயம்!

“இருவரை மணந்தேன். ஆதலினால்,
என்றன் தலையும், ஐயையோ!

பாலை வனமாய்ப் போனதுவே !
பட்டது போதும்” என்றனரே!


19