உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொந்த மாக அவருக் குள்ள
ஐந்து காணி நிலத்திலும்
நன்கு முற்றி யிருந்த கதிர்கள்
நாச மாகப் போயின!

“ஆத்தி ரத்தில், அவச ரத்தில்
அறிவி ழந்தேன். ஆதலால்.
நேத்தி ரம்போல் காத்து வந்த
நேர்த்தி யான பயிரெலாம்

எரிந்து சாம்பல் ஆன தய்யோ!
என்றன் வயிறும் பற்றியே
எரியும் விதத்தை எவரி டத்தில்
எடுத்து ரைப்பேன்!” என்றனர்.


29